நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

நர்தன் இயக்கத்தில், சிம்பு ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ படத்திலிருந்து சிம்புவை தயாரிப்பாளர் நீக்கினார். இதனிடையே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் ஏற்கனேவே ஒரு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு உள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்க கோரியுள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *