Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது.

Posted on June 3, 2019

காபூல்,

எனவே இலக்கை அடையும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பு இல்லை என தலீபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கடத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் வெடிகுண்டுகளை நிரப்பி, அதனை ஓட்டி வந்து, போலீஸ் நிலையத்தின் மீது மோதி வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் போலீஸ் நிலைய கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சில் திடீரென குண்டுவெடித்தது. அதனை தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme