மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா

மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா,

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக அஞ்சாதே, முரண் உள்ளிட்ட படங்களில் வில்லத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘திரவம்’ என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கஇருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *