Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா

உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா, விளக்கம் வெளியீட ராஜ்கமல் நிறுவனம்

Posted on September 27, 2019

கமல் தன்னிடம் ‘உத்தம வில்லன்’பட ரிலீஸுக்காக 10 கோடி பணம் வாங்கிவிட்டு இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார் என்று ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் கூறியிருக்கும் புகார் அபாண்டமானது. அது கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது என்று ராஜ்கமல் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி கடன் பெற்றதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் ரூபாய் 10 கோடி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நமது நிறுவனத்திற்காக கமல்ஹாசன் படம் நடிக்க முன்வரவில்லை என்றும் ரூபாய் 10 கோடி பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் தெரிவித்திருந்தார்.
ஞானவேல் ராஜாவின் அப்புகாருக்கு இன்று விளக்கம் அளித்த கமலின் ராஜ் கமல் நிறுவனம்,…தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். ‘உத்தம வில்லன்’பட ரிலீஸ் சமயத்தில் ஞானவேல் ராஜாவை கமல் சந்திக்கவேண்டிய அவசியம் கூட ஏற்படவில்லை. இந்த அபாண்ட புகார் தொடர்பாக ஞானவேல் ராஜா மீது மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்’என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
  • From Madurai to the Silver Screen — Eesha, the New Hero Introduced Through Habeebi!
  • *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme