
ஈவில் டெட் பர்ன்’ (Evil Dead Burn) என்பது சாம் ரைமியின் பிரசித்தி பெற்ற திகில் திரைப்பட வரிசையின் ஆறாவது படைப்பாகும். இப்படம் திரையரங்குகளில் தமிழில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கொடூரமான ரதம் சொட்ட தெறிக்க திகில் நிறைந்த காட்சிகள், ரத்தச் சிதறல் (திரையில் காண்போர் கதற) மற்றும் குடும்பப் பின்னணியிலான பேய் சம்பவங்கள் ஆகியவை இந்தப் படத்தின் முக்கிய பலமாக திகில் படப் பிரியர்களுக்கு ரத்தம் தரிக்க திரவிருந்தாக ஈவில் டெட் பர்ன் திரைப்படம் அமைந்துள்ளது.
ஈவில் டெட்’ திரைப்படங்களுக்கே உரித்தான டெடைட் (Deadite) திரையில் மனித உயிரும் கதறவிடும் ரத்தம் தெறிக்க, அமானுஷ்ய சக்திகளின் பிடியில் சிக்கும் ஒரு குடும்பத்தின் போராட்டமுமே இந்த படத்தின் கதைக்களமாகும். வழக்கமான ஹாரர் படங்களை விட, அதிகப்படியான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் வகையில் பயமுறுத்தும் காட்சிகள் (Jump Scares) சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ் டப்பிங்கும் கதையின் தீவிரத்திற்கு ஏற்ப அழுத்தமாக இருப்பதால், திகில் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தைத் தருகிறது.

ஈவில் டெட் பர்ன் திரைப்படம் வானிசெக் இயக்கிய இப்படம், கணவரின் மரணத்திற்குப் பிறகு துயரத்தில் மூழ்கிய ஒரு பெண் தனது மாமியார் வீட்டின் தனிமையான இல்லத்திற்குச் செல்வதை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு சங்கடமான சந்திப்பாகத் தொடங்கும் இது, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பேய் பிடித்தவர்களாக மாறுவதால், விரைவாக அமானுஷ்யப் படுகொலையாக மாறுகிறது.