சிறார் கூர்நோக்கு இல்லத்தில் படித்து முடித்து வெளியேறும் நாயகன் நிகில், இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதியில் பணிக்கு சேரும் நாயகன் தனுடன் பணிபுரியும் நண்பன் சரியாக உடை அணிவதுதால் நாயகனுக்கு ரூம் பாயாக வேலை கிடைக்கிறது, அந்த விடுதியில் தங்குபவர்களின் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து அந்த நபர்களிடம் வீடியோவை காமித்து பணம் பறிப்பது மற்றும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல மோசடிகளை விவேகம் நடைபெறுவதை நாயகன் கண்டுபிடிக்கிறார் மற்றும் அதற்கான ஆதாரங்களை கைப்பற்றுவதோடு விடுதியின் மேலாளரை கொடூரமாக கொலை செய்கிறார். தலைமை வில்லன் விடுதியில் காணாமல் போன HARDISK மற்றும் அதில் இருக்கும் வீடியோவை தேடி தலைமை வில்லன் குழு நாயகனே தேடுதல் வேட்டை ஆரம்பிக்கிறது , மறுபக்கம் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸும் நிகிலை தேடுகிறது.
நாயகன் தனது பள்ளிப்படிப்பு மற்றும் குடும்பம் அம்மா, அப்பா, தங்கை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்த நாயகன் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த அனாதையாகிறார். தனது குடும்பத்தில் உள்ளவர்களை கொன்றதற்கான காரணமானவர்களை தேடி நாயகன் நிகிலின் செல்கிறார் அப்பொழுது சமுதாயத்தில் நடக்கும், சில உண்மை சம்பவங்களை திரைக்கதையுடன் இணைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைக்கதையாக திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது இயக்குநர் ஜெகன் ராயன் திரைக்கதை.
நாயகன் நிகில் சொகுசு விடுதியை சுற்றி சுற்றி வருவதற்கான காரணம் என்ன ?,
போலீசார் விசாரணையில் சொகுசு விடுதி மற்றும் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானதற்கும் இருக்கும் தொடர்பு என்ன ?
நாயகன் நிகில் குடும்பத்தில் உள்ளவர்கள் எதனால் கொல்லப்பட்டார்கள்?
நாயகன் தன் குடும்பத்தை சீர்குலைத்தவர்களை தன் கோபத்தின் மூலம் பைத்தியத்தாரா?
நாயகிக்கும் உள்ள ரகசியம் என்ன?
இது போன்ற கேள்விக்கு பதிலே ‘ரூம் பாய்’ திரைப்படத்தின் திரைக்க
தை.