’கார்மேனி செல்வம்’ – விமர்சனம்
அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கார்மேனி செல்வம்’ .
நாயகன் செல்வம் ஒரு மகன் மனைவி என நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார் அவர் தனது மகன் தனக்கு என்ன சேர்த்து வைத்துள்ளாய் என்று கேட்கக் கூடாது என்பதற்காக சென்னையில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்கிறார் நாயகம் செல்வம்.
கௌதம் மேனன் வீட்டில் அவர் குடும்பத்திற்காக கார் ஓட்டுநராக இருக்கும் சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
கௌதம் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்ல இருப்பதால் தன்னிடம் இருக்கும் காரை சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வரும் வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறார்.
இதனையடுத்து சமுத்திரக்கனி , கௌதம் மேனனுக்குத் தெரியாமல் அவரது காரை ஷேரிங் முறையில் பயணிக்கும் டிராவல்ஸ் சேர்த்து பணம் சம்பாதித்து வருகிறார்.
கார் ஓட்டும்போது தனது வாடிக்கையாளர்களின் உரையாடல்களையும் அவர்களின் கருத்தையும் கேட்டு கடன் வாங்கினால் வாழ்க்கையில் பணக்காரர் ஆக முடியும் என்று முடிவு செய்கிறார் செல்வம்.
அதற்காக முதலில் கிரெடிட் கார்டு வாங்கி சொந்தமாக (வீடு ) அரை கிரவுண்ட் மனை ஒன்றை வாங்குகிறார் இதனால் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது.
ஒரு கட்டத்தில் கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய கார் மெக்கானிக் ஒன்றரை லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று கூற.
நாயகன் ( செல்வம்) சமுத்திரக்கனி விபத்தில் சிக்கிய காரை சரி செய்ய மேலும் கடன் வாங்குகிறார் இதனால் கடனை திருப்பி கட்ட முடியாமல் கடன் காரர்கள் வீட்டில் வந்து தொந்தரவு செய்ய இறுதியில் அவர் எடுக்க முடிவு என்ன கடனை திருப்பி செலுத்துவதற்காக துபாயில் கார் ஓட்ட செல்கிறார் செல்வம் அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் செல்வம் சிந்தித்து எடுக்க முடிவு ஆகியவை கார் மேனி செல்வத்தின் திரைக்கதை.
நாயகன் செல்வம் துபாய் சென்று “அங்கு அவர் எடுக்க முடிவு என்ன”தனது குடும்ப கடனை அடைத்தாரா?
தனது முதலாளியின் காரை விபத்திலிருந்து மீட்டு கௌதம் மேனனிடம் காரை ஒப்படைத்தாரா ? இல்லையா?
தன சொந்த மண்ணிலிருந்து வெளிநாட்டுக்கு சென்று குடும்பத்திற்காக உழைக்கும் மனிதர்களின் மன உளைச்சலையும் அவர்கள் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளையும் கார் மேனி செல்வம் திரையில் நம் கண் முன்னே நடிப்பின் மூலம் கொண்டு வருகிறார் நாயகன் செல்வம்.
சாமானிய மனிதர்கள் கடன் வாங்கினால் சமுதாயம் அவர்களை எது பது போன்ற கண்ணோட்டங்களில் பார்க்கும் என்பது என்பதே ’கார்மேனி செல்வம்’ படத்தின் மீதிக்கதை.