
நடிகர்கள் :-
ஜூட் மாரிமுத்துவாக உதய தீப்
இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தியாக ஆதேஷ் பாலா
கிரணாக ராட்சசன் யாசர்
வீரயாவாக மாஸ்டர் அஜய்
ஸ்டெல்லாவாக கவிதா சுரேஷ்
ஆரோக்கிய ராஜாக பிரேம் கே சேஷாத்ரி
படக்குழு:-
இயக்குனர், எழுத்தாளர்: ஆண்டன் அஜித்
இசையமைப்பாளர்: சரண் ராகவன், வி.ஜே.ரகுராம்
ஒளிப்பதிவாளர்: பூபதி வெங்கடாச்சலம்
எடிட்டர்: சுந்தர் எஸ், ராகேஷ் லெனின்
தயாரிப்பு நிறுவனம்;: ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ்
மக்கÚள் தொடர்பு: ஆர். மணி மதன்
உதய தீப், தனது தந்தையின் மரணத்திற்கு என் அம்மாவின் உடன் பிறந்தவர்கள் இரண்டு மாமன்கள் தான் காரணம் என நினைத்து, அவர்கள் இருவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரம், இளைய மாமனின் மகளை காதலிக்கிறார். தன் நண்பர்களோடு மொட்டை மாடியில் பிறந்தநாளுக்காக மது பார்ட்டி வைக்கிறார் அதில் நிலைமாமா கலந்து கொள்ள அவரை நண்பர்கள் முன் அசிங்கப்படுத்துகிறார் அதனைத் தொடர்ந்து நாயகன் மீது இல்லை மாமா கோபமாக உள்ளார் இந்நிலையில், இந்த மாமன் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். துக்க வீட்டில் இறுதிச் சடங்குகளுக்கு உடலை வைத்திருக்கின்றனர். அன்று இரவு உதய தீப், மற்றும் இன்னொரு மாமன் மகன் இருவரும் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அசதியில் தூங்கி விடுகின்றனர். மாமன் மகன் விடியற்காலையில் புகை (கஞ்சா) பிடிக்க வெளியே செல்கிறான். உதய தீப் அருகில் இருந்து உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தூங்கி விடுகிறான். அப்போது பிணம் திடீரென காணாமல் போகிறது. இந்த மர்மத்தை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா களமிறங்க நாயகனின் இளைய மாமா இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலாவுக்கு பள்ளி பருவத்து நண்பர் என்பதால் தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறார், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே இன்னொரு மாமனும் மர்மமான முறையில் இறக்கிறார்.
இந்த தொடர் மரணங்கள் பின்னணி என்ன?
இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலாவுக்கு பள்ளிப்பருவத்த நண்பர் நாயகனின் இளைய மாமா என்பதால் மாதேஷ் பாலாவின் கள்ளக்காதலை அறிந்த இளைய மாமாவை என்ன செய்திருப்பார்?
கஞ்சா போதை ஒரு மனிதனை எந்த அளவிற்கு பாதிக்கிறது??
சாவு வீடு திரைப்படம் என் சாவீ திரைப்படமாக காரணம் என்ன?
இது போன்ற கேள்விக்கு பதில் தான் சாவீ திரைப்படத்தின் திரைக்கதை.
காணாமல் போன பிணம் எங்கே போனது? ? என்பதே படத்தின் மீதிக்கதை.