
செப். 12 -தொழில் ரீதியாக உலக அளவில் மாணவர்களை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் முதன்மையான வணிகக் குழுமமான சோனா வள்ளியப்பா குழுமத்தின் ஒரு அங்கமான சோனா ஸ்டார் இன்னோவேஷன்ஸ் நிறுவனம், உலகளாவிய மற்றும் டிஜிட்டல் தொழில்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தயார்படுத்துவதற்காக கர்னாடக மாநில அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கர்னாடக டிஜிட்டல் எகானமி மிஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த பயிற்சியானது பிடாடியில் உள்ள சோனா மேம்பட்ட கற்றல் மற்றும் தொழில்முனைவோர் மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. வரும் 2026-27-ல் முதல் பேட்ச் துவங்க உள்ள நிலையில் பெங்களூர் மற்றும் பெலகாவி, மங்களூரு, ஹுப்ளி, சிவமொக்கா மற்றும் தார்வாட் போன்ற பகுதிகளில் உள்ள 500 முதல் 1000 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து சோனா குரூப் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா கூறுகையில், இன்று பல மாணவர்கள் தங்களுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பது பற்றி அறியாமலேயே பணியில் சேருகிறார்கள். எங்கள் பயிற்சி தத்துவம் ஒரு 3D மாதிரியை அடிப்படையாகக் கொண்டது – வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை இதில் இடம் பெறுகிறது. கர்னாடக மாநிலத்தில் உள்ள இளைஞர்களை உலகளாவிய வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் அதே வேளையில், மாநிலம் முழுவதிலும் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கர்னாடக டிஜிட்டல் எகானமி மிஷன் உடன் இணைந்துள்ளோம். திறமைமிக்க மாணவர்களை நாம் உருவாக்கும்போது அது தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் சிறந்த பலன் அளிக்கும் என்று தெரிவித்தார்.
இதன் பயிற்சித் தத்துவமானது 3D மாதிரியை அடிப்படையாகக் கொண்டது – வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தல், இங்கு வடிவமைப்பு என்பது வளர்ந்து வரும் தொழில்துறை போக்குகளின் நுண்ணறிவுகளுடன் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்துறை சார்ந்த பாடத்திட்டமாக இருக்கும். தொழில்நுட்ப நிபுணத்துவம், டிஜிட்டல் சேவைகள், தகவல் தொடர்பு மற்றும் சாப்ட்வேர் திறன்கள் ஆகியவற்றில் விரிவான துறை சார்ந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு முகாமும் நடைபெறும். இது உடனடி வேலைவாய்ப்பை அவர்களுக்கு உறுதி செய்வதோடு, அது கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியையும் குறைக்கும்.
பிடாடி வளாகத்தில் கல்லூரிகளையும் நிறுவனங்களையும் ஒரே சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், சோனா மேம்பட்ட கற்றல் மற்றும் தொழில்முனைவோர் மையமானது கல்வி, ஆலோசனை மற்றும் நிகழ்நேர தொழில்துறை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
இது குறித்து கர்னாடக டிஜிட்டல் எகானமி மிஷன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் குமார் குப்தா கூறுகையில், எங்கள் அமைப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, சமூகப் பங்கேற்பு மற்றும் தேவை-விநியோக சீரமைப்பை உறுதி செய்வதை மேற்பார்வையிடும். கர்னாடகா முழுவதும் டிஜிட்டல் வாய்ப்புகளை கொண்டு செல்வதே எங்களின் முக்கிய நோக்கமாகும். சோனா மேம்பட்ட கற்றல் மற்றும் தொழில்முனைவோர் மையத்துடன் நாங்கள் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பெங்களூரை தாண்டி சிறு நகரங்களான துமகுரு, பெலகாவி, மங்களூரு மற்றும் சிவமொக்கா போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு உலகளாவிய பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த முயற்சி, உலகளாவிய பணிகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் என்று தெரிவித்தார்.
KDEM – Media Contact Gaurav K Punjabi +91 99009192gm.marketing@karnatakadigital.in