Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது

Posted on September 12, 2025

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிப்புகள், செழுமையான தயாரிப்பு மதிப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் ஆகியவை இதனை உயர்த்திக் கொண்டிருந்தாலும், இந்த படைப்பின் ஆழத்தை அதிகரித்த முக்கிய அம்சமாகும் – நடிகையுமான சாந்தி பாலச்சந்திரன் இணை எழுத்தாளராக பங்களித்திருப்பது. தமிழ் ரசிகர்கள் அவரை ஸ்வீட் காரம் காஃபி தொடரின் நிவி கதாபாத்திரம் மூலமாக அறிவார்கள். ஒரு மனிதவியல் நிபுணராகப் பயின்ற அவர், இயக்குனரும் இணை எழுத்தாளருமான டொமினிக்குடன் சேர்ந்து கற்பனைக்கான பெருவெளியை உருவாக்கியதோடு, அதனை மனித உணர்ச்சிகளில் நிலைநிறுத்தி, கதையின் நெடுங்கால வேராகவும் திகழ்கிறார்.

தரங்கம், ஜல்லிக்கட்டு, குல்மொஹர் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்புக்குப் பெயர் பெற்ற சாந்தி, தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நுணுக்கத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்தவர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், கல்வியுலகிலிருந்து கதை சொல்லும் உலகிற்கு வந்தவர், தனது தனித்துவமான பார்வையையும் சிந்தனையையும் கொண்டு வந்துள்ளார்.

திரைக்கதை இணை எழுத்தாளராக இருப்பதைக் கடந்தும், லோகாவில் அவர், கதையின் கருத்து வடிவமைப்பிலும், தயாரிப்புக் கட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார். பல்வேறு துறைகளோடு இணைந்து, செழுமையான விபரங்களுடன் கூடிய ஒருமைப்பாட்டான திரைப்பட அனுபவத்தை உருவாக்க உதவினார். பண்டைய நாட்டுப்புறக் கதைகளையும் நவீன கற்பனை-சூப்பர்வுமன் கான்செப்டையும் இணைத்து, அதனைப் பெண் பார்வையில் வேரூன்றச் செய்தது லோகாவை தனித்துவமான படைப்பாக மாற்றியுள்ளது.

தனது அனுபவத்தைப் பகிர்ந்த சாந்தி கூறினார்:
“லோகா என் இதயத்திற்குப் மிகவும் நெருக்கமானது. டொமினிக் மற்றும் லோகா குழுவோடு சேர்ந்து நாட்டுப்புறக் கதைகள், கற்பனை, வலுவான பெண் கதையை ஒருங்கிணைப்பது சவாலானதோடு நிறைவான பயணமாக இருந்தது. உலகம் முழுவதும் பார்வையாளர்கள் இப்படத்தை இத்தனை அன்போடு ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும் போது நான் அளவிட முடியாத நன்றியுணர்வில் மூழ்குகிறேன்.”

சினிமா ரசிகர்கள் தற்போது Chapter 2 மற்றும் அடுத்தடுத்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், அண்மையில் ‘மூத்தோன்’ எனும் கதாபாத்திரத்தின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டு, மெகா ஸ்டார் மம்முட்டி இந்த தொடரில் இணைவதை உறுதிசெய்திருப்பது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கேட்கப்பட்ட போது சாந்தி சிரித்துக்கொண்டு,
“இப்படம் போன்ற தொடரில் ஒரு புராண நாயகன் இணைவது எங்களுக்கு பெருமை. ஆனால் எங்களுக்கு முக்கியமானது – Chapter 1 போலவே எங்கள் திறமையான கூட்டாளர்களை உற்சாகப்படுத்தும் திரைக்கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதே,” எனக் கூறினார்.

லோகா: Chapter 1 – சந்திராவின் மூலம் சாந்தி பாலச்சந்திரன், நடிகை, எழுத்தாளர், கதைசொல்லி என இந்திய சினிமாவின் பல்திறமையான படைப்பாளிகளில் ஒருவராக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். இன்னும் தொடங்கியிருக்கிற அவரது படைப்புப் பயணம், எதிர்காலத்தில் மேலும் பல அற்புதங்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடக தொடர்புகளுக்கு, பேட்டிகள் மற்றும் விளம்பரத் தகவல்களுக்கு:
பி.ஆர்.ஓ: ரேகா

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme