இன்றைய தலைமுறையினர் “பெண் பிள்ளைகள்”எடுக்கும் முடிவுகள் பெற்றோரை மிகவும் பாதிக்கிறது இதனை திரை படமாக எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது ‘பேட் கேர்ள்’ படம்

நாயகி ரம்யா (அஞ்சலி சிவராமன்) (பிரமாண குடும்பத்தை சேர்ந்தவர்) பள்ளி பருவத்தில் படிப்பு சரியாக வரவில்லை, பள்ளி பருவத்திலேயே தன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதல் செய்கிறார், ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும், இது பெற்றோர்களுக்கு தெரிந்து வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது.
அம்மா, ரம்யாவை புதிய ஸ்கூலில் சேர்க்க, அங்கு அவர் முதல் நாள் செல்லும் போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை எல்லாம் கேட்பேன், கல்லூரியில் என் இஷ்டம் எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறார் நாயகி மற்றும் அவர் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவரின் அம்மாவின் (சாந்திபிரியா) கட்டுப்பாடுகள் போன்றவற்றால் எரிச்சலைடைகிறார் நாயகி ரம்யா.
நாயகி ரம்யா (அஞ்சலி சிவராமன்) கல்லூரி வாழ்க்கை, வேலை என அடுத்தடுத்த அத்தியாயங்களில் வீட்டை விட்டு விலகி வாழத் தொடங்குகிறார். அடுத்தடுத்து ரம்யாவின் வாழ்வில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேற, கட்டுப்பாடான (பிராமண குடும்பத்தில் பிறந்த) பெண் தமக்கு படித்த (தான் தேடிய ) காதல் கிடைத்ததா?
நாயகி தேடிய சுதந்திர வாழ்க்கை முழுமையாக கிடைத்ததா?
தனது அப்பா அம்மா அரவணைப்பில் முழு சுதந்திரம் உள்ளதா ? போன்ற கேள்விக்கு பதில் தான் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்குயிருக்கும பேட் கேர்ள்’ திரை படம் ,