
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றி கரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு வருகிறது

அமைதியான தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கொண்டுவர ஐந்து கன்டெய்னர் லாரிகள் முழுக்க துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் நுழைவதாக என்ஐஏ அதிகாரியான பிஜு மேனனுக்கு தகவல் கிடைக்கிறது. அவர்களை தடுக்கும் நோக்கி அதிகாரிகள் தோல்வி அடைகின்றனர். ஆயுதங்கள் அடங்கிய அந்த கன்டெய்னர்கள் ஒரு கேஸ் ஃபேக்டரியல் பதுக்கி வைக்கின்றனர்.
நாயகன் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ரகு (சிவகார்த்திகேயன்), என்ஐஏ அதிகாரி பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். துப்பாக்கிக் கடத்தல் கும்பலை பிடிப்பது சாத்தியமில்லை என்று தெரியவரும் நிலையில், சாக விரும்பும் ஹீரோவை வைத்து அந்த ஃபேக்டரியை வெடிக்கச் செய்ய திட்டமிடுகிறது என்ஐஏ. அதற்காக நாயகனை தயார் செய்து அவரை அங்கே அனுப்புகிறது. அதிகாரிகள் சொன்னதை நாயகன் நிறைவேற்றினாரா இல்லையா?
நாயகன் காதல் நிறைவேறியதா? நாயகன் (உடல்) பிரச்சனை என?என்பதுதான் ‘மதராஸி’ படத்தின் திரைக்கதை.
சிவகார்த்திகேயன் – ருக்மிணி வசந்த் காதல் காட்சிகள் திரையில் ரசிக்க வைக்கிறது.சிவகார்த்திகேயன் கதாநாயகனாக சிறப்பாக சண்டையிடும் காட்சி ஹாலிவுட் படங்களை விஞ்சும் வகையில் அந்த காட்சியின் (வேகம்) நாயகன் ஸ்டண்ட் கலைஞர்களும், ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர்.