Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

குற்றம் புதிது திரை விமர்சனம்

Posted on August 30, 2025

போலீஸ் உதவி ஆணையர் சத்யா (மதுசூதனன் ராவ்) மகள் பிரீத்தி (சேஷ்விதா கனிமொழி) ஒரு நாள் இரவு தந்தையிடம் கைபேசியில் பேசும் போது ஆட்டோவில் வீட்டிற்கு வருவதாக தகவல் தெரிவிக்கிறார். அடுத்த நாள் காலை தந்தை மகளுக்கு தேனீர் கொடுக்க அவளது ரூமுக்கு சென்று பார்க்கும் மகள் இரவு வீடு திரும்ப வில்லை என்பதை அறிகிறார். காணாமல் போன மகள் பிரீத்தியை போலீஸ் தீவிரமாக தேடும் போதுஇ ஒரு வீட்டின் அருகில் உள்ள ஆட்டோவில் ரத்தகறைகள் இருப்பதாக தகவல் கிடைக்க அங்கு போலீஸ் படை விரைகிறது. வீட்டின் மாடியில் குடி இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் விநாயகம் ரூமில் ரத்த கறைகள் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அங்கு பிரீத்தியின் கைபேசி மற்றும் அறுபட்ட கை விரல் இருப்பதை கண்டு பிரீத்தி கடத்திஇ கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் பற்றி விசாரணை செய்கிறார்கள். பக்கத்து ரூமில் குடி இருக்கும் உணவு விநியோகம் செய்யும் கதிரேசன் இடமும் (தருண் விஜய்) விசாரணை செய்கிறார்கள். கதிரேசனை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை செய்த பின் அவன் குற்றவாளி இல்லை என்று அனுப்பி விடுகிறார்கள். காவல்துறை இந்த கொலையை ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் தான் கொலை செய்திருப்பான் என்று முடிவு செய்து அவனை தேடும் வேட்டையில் போலீஸ் இறங்குகிறது.சில நாட்கள் கழித்து திடீரென்று கதிரேசன் மன அழுத்தத்துடன் போலீஸ் நிலையம் வந்து அந்த கொலையை நான்தான் செய்தேன் என்று கூறி சரண்டர் ஆகிறார். இந்த பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தாக கூறுகிறான். மேலும் இன்னும் 2 கொலை செய்து இருக்கிறேன். அது ஒருவர் கணக்கு ஆசிரியை மற்றொருவர் எனது கல்லூரி நண்பன் என தெரிவிக்கிறார். காவல்துறை கதிரேசன் கூறிய தகவல் படி விசாரணை செய்யும் போது, அவர் கொலை செய்ததாக சொல்லப்பட்ட கணக்கு ஆசிரியை மற்றும் அவரது நண்பன் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது. மேலும் அவனை பற்றி விசாரிக்கும் போது அவனை பற்றி நல்ல விதமான தகவல்கள் மட்டும் அவர்களுக்கு கிடைக்கிறது. கோர்ட்டில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படும் கதிரேசனை சிகிச்சைக்கு அனுப்பி சரியாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி நீதிபதி தேதி குறிப்பிட்டு கேஸை ஒத்திவைக்கிறார். இந்நிலையில், இறந்ததாகக் கூறப்பட்ட பிரீத்தி ஒரு சில நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்படுகிறார். மர்மமான முறையில் துண்டிக்கப்பட்ட கை விரலுடன் காயத்துடன் மீண்டும் தோன்றும்போது, வழக்கு ஒரு குழப்பமான திருப்பத்தை எடுக்கிறதுஇ இது காவல்துறையினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவள் திரும்பி வருவது சட்டம் மற்றும் தர்க்கத்தின் அடித்தளத்தையே சவால் செய்வது மட்டுமல்லாமல்இ உண்மை மற்றும் யதார்த்தத்தின் தன்மையை அனைவரும் கேள்வி கேட்க வைக்கிறது. அதன் பின் கதிரேசன் குற்றமற்றவர் என்று கோர்ட் முடிவு செய்து அவரை விடுவிக்கிறது. உண்மையில் நடந்தது என்ன? தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் என்ன ஆனார்? கதிரேசன் தான் இந்த கொலையை செய்தேன் என்று ஏன் கூறினார்? பிரீத்திக்கும் கதிரேசனுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் பதிலளித்து உச்சக்கட்டத்தில் குற்றம் புதிது பாகம் 2 க்கான லீடுடன் முடிகிறது

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme