நடிகர் உதயா அக்யூஸ்ட் திரைப்படம் மூலம் தனது நடிப்பின் திறமையை வெள்ளித்திரையில் ஜொலிக்க (ரசிக்க) வைத்துள்ளார் சென்னை புழல் சிறையிலிருக்கும் கைதி ரவுடி கணக்குவை (உதயா) சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக செல்லும் மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்). பிரபல அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் கொலை செய்த வழக்கு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அழைத்துச் செல்கின்றனர். கைதி கணகுவை கொலை செய்ய போலீஸ் வாகனத்தை தாக்கும் ஒரு ரவுடி கும்பலிடமிருந்து வேந்தனை மீட்டு வேலூரில் உள்ள ஒரு ஊரில் தங்க வைக்கிறார் வேந்தன். ரவுடிகளிடமிருந்து தப்பித்தாலும், அந்த ஊரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி கணகுவை என்கவுன்டரில் சுட்டு தள்ள முயற்சி செய்வதை அறிந்து கொள்கிறார் வேந்தன். கணகுவை காப்பாற்ற முடிவெடுக்கும் வேந்தன் ரவுடி கும்பல், போலீஸ் என்கவுண்டர் ஆகியவற்றிலிருந்து எப்படி வியூகம் வைத்து தப்பிக்க உதவினார்? ரவுடி கும்பலை அனுப்பியது யார்? அரசியல்வாதி குணசேகரன் கொலையானது எதற்காக? யார் கொன்றனர்? அதற்கான மர்ம பின்னணி என்ன? போலீஸ் தீவிரமாக என்கவுண்டர் செய்ய தேடுவது ஏன்? போலீசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இறுதியில் சாதாரண கான்ஸ்டபிள் வேந்தனால் சேலம் நீதிமன்றத்தில் கணகுவை ஆஜர் படுத்த முடிந்ததா? அக்யூஸ்ட் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை .