பறந்து போ திரைப்படம் அப்பா-அம்மா-மகன் இவர்கள் மூலம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதே திரைக்கதையாக ராம் கொடுத்துள்ளார்,
கதையின் நாயகனாக சிவா, கிரேஸ் கணவன், மனைவி இருவரும் மதம் மாறி திருமணம் செய்கிறார்கள். அதனாலேயே பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாழ்ந்து வருகின்றனர், தனது ஒரே மகனை மிகப்பெரிய(MLA, CELEBRITY) படிக்க வைக்கும் பள்ளி பள்ளியில் படிக்க வைக்கிறார் கதாநாயகன் ஆனால் அவர் பைக் EMI கட்ட முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
சொந்தமாக மளிகை கடை வைக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறார் கோகுல்(சிவா). அவரின் மனைவி குளோரி(கிரேஸ் ஆண்டனி) சேலை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்த உதவி செய்கிறார். அவர்களின் ஒரே மகன் அன்பு(மிதுல் ரயன்).
சுவர்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, இண்டர்நெட்(ஆன்லைன் கிளாஸ்) தான் உலகம் என்பது போல் அந்த பையனும் வளர்கிறான்.
நாயகன் சிவா தன் மகனுடன் வெளியே வரும் போது EMI காரனுக்கு பயந்து சிவா தன் பையனை அழைத்துக்கொண்டு தன் பொற்றோர் வீட்டுக்கு பைக்-லேயே செல்கிறார்.
அப்படி செல்லும் போது இவர்கள் சந்திக்கும் இடம், மனிதர்கள், மகனின் தவிப்பு, ஆசை, ஆர்வம், விருப்பம், (நகரத்தில்)நாம் எந்த மாதிரி வாழ்கை வாழ்கிறோம் என்பதை வெள்ளித் திரையில் ரசிக்கும்படி படி சொல்லி புள்ள திரைக்கதை தான் பறந்து போ .
திரைப்படத்தில் வசனங்கள் எதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது பறந்து போ படத்திற்கு பக்க பலமாக உள்ளது.