சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்திருக்கும் லக்கி பாஸ்கர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி.
இதில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சச்சின் கெடேகர், டின்னு ஆனந்த், ராம்கி, சாய் குமார், ரித்விக், ராஜ்குமார் காசிரெட்டி, சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர், ராங்கி, ஹைப்பர் ஆதி, சூர்யா ஸ்ரீPனிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை : ஜி.வி. பிரகாஷ் குமார், எடிட்டிங் : நவீன் நூலி, ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, மக்கள் தொடர்பு : டி ஒன், சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
1989 ஆம் முதல் 1992 ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் பம்பாயில் நடுத்தர வர்க்க வங்கி காசாளராக இருக்கும் பாஸ்கர் குமாரை (துல்கர் சல்மான்) சுற்றி கதைக்களம் நகர்கிறது. அவர் தனது தம்பி, சகோதரி, நோய்வாய்ப்பட்ட தந்தை, மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி) மற்றும் மகன் கார்த்திக் (ரித்விக்) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறார். குடும்ப சுமை காரணமாக அவர் நிதி நெருக்கடிகள் மற்றும் பெருகிய கடன்களால் சிக்கித் தவிக்கிறார். பகுதி நேரமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணி நமித்தமாக உதவி செய்து சிறுக சம்பாதித்தாலும் கடன்களை அடைக்க முடியவில்லை. அவர் பணி புரியும் வங்கியில் நேர்மையாகயும் சாமர்த்தியமாகவும் செய்யும் செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட, தான் எப்படியும் உதவி மேலாளராக பதவி உயர்வு பெற்று விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில் அதுவும் கனவாக போகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் பாஸ்கர் நண்பர் மூலம் ஆன்டனி( ராம்கி) அறிமுகமாக, துறைமுக சரக்கை வெளியே எடுக்க பணம் கொடுத்தால் அதை விற்று கமிஷன் தருகிறேன் என்று கூற, வேறு வழியின்றி வங்கியில் பணத்தை எடுத்து பின்னர் திருப்பி வைத்து விடும் கையாடல் முதலில் பத்தாயிரத்தில் தொடங்கி பத்து லட்சமாக விரிவடைகிறது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டத்தால் தப்பிக்கும் பாஸ்கருக்கு தான் நினைத்த வாழ்க்கையும், கடனில்லாமல், தம்பி, தங்கையை படிக்க வைப்பதுடன், பணம் சம்பாதிக்கும் வழியையும் கண்டு பிடித்து அதன்படி பயணிக்கிறார். பாஸ்கருக்கு பதவி உயர்வு கிடைத்து வங்கியின் மேலாளராகிறார் இந்த அதிகாரத்தால் அவருக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொண்டுவருகிறது, பேராசையில் அவர் பங்குச் சந்தையில் ஒரு பெரிய புள்ளியாக இருக்கும் ஹர்ஷா மெஹ்ராவை சந்திக்கிறார், அவரது குழுவுடன் சேர்ந்து, கோடிகளை குவிக்கிறார். இந்த ஈடுபாடு அவரை சிபிஐ விசாரணையோடு கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்குகிறது அவரது மனைவியுடனான (மீனாட்சி சவுத்ரி) உறவில் விரிசலும் உண்டாகிறது. சக்தி வாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட கோடிக்கணக்கான பணம் காணாமல் போன வங்கி மோசடி ஊழலில் பாஸ்கர் சிக்குகிறார். அதன் பின் பாஸ்கர் என்ன செய்கிறார், என்ன விளைவுகளை சந்திக்கிறார்? தனது களங்கத்தை எப்படி சாமர்த்தியமாக அழிக்க முயல்கிறார்? பாஸ்கர் அதிர்ஷ்டத்தால் தப்பித்தாரா? என்பதுதான் மீதமுள்ள கதை.