கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அமரன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி
இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, கீதா கைலாசம், லல்லு,ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீPகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையில் இருந்து புது டெல்லிக்கு விமானத்தில் பயணிக்கும் இறந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து ரெபேகா வர்க்கீஸ் (சாய் பல்லவி) தங்கள் காதல் கதையையும் பின்னர் கணவரின் அர்ப்பணிப்பான ராணுவ பணியையும் வலிகளோடு தன் குரலால் விவரிக்கும் காட்சியும் பல்வேறு ஃப்ளாஷ்பேக்குகளுக்கு மாறும் துணிச்சலான ராணுவ வீரரின் கதையை காட்சிப்படுத்துவதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது.சிறு வயதில் முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமிக்கு செல்லும் வாய்ப்பால் ராணுவ பணியின் மேல் ஈர்ப்பு ஏற்பட, ராணுவ வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடரும்போது, காதலி இந்து ரெபேக்கா வரக்;கீஸை (சாய் பல்லவி) சந்திக்கிறார்.மதம், மொழி கடந்த காதல் என்பதால் இந்துவின் பெற்றோர் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முகந்த் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் லெப்டினென்ட், கேப்டன் என்று பதவி ஏற்று பின்னர் பதவி உயர்வு பெற்று இந்திய இராணுவத்தில் சீட்டா 44 வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் மேஜராகிறார். அவர் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்கிறார். அந்த நடவடிக்கையில் கடுமையான காயங்களைச் சந்தித்த போதிலும், பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு முகுந்த் வெற்றிகரமான திட்டங்களை போட்டு பணியை தொடர்கிறார். இந்நிலையில், தாக்குதலில் இறந்த பயங்கரவாதியின் தம்பி ராணுவத்தினரை வீழ்ந்த வியூகம் அமைக்கிறார். இதனை அறிந்த முகுந்த் தெற்கு காஷ்மீரில் ஒரு சிவிலியன் வீட்டில் மறைந்திருக்கும் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றி அறிந்து ஒரு குழுவை வழிநடத்தி சிப்பாய் விக்ரம் சிங்குடன் சேர்ந்து, பலத்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்து வெற்றிகரமாக வீட்டிற்குள் நுழைகின்றனர். இதில் ராணுவ சிப்பாய் விக்ரம் சிங் இறக்க இறுதி வரை சிவிலியன்களை காப்பாற்றி மேஜர் முகுந்த் தீவிரமாக சண்டையிட்டு தீவிரவாதி அல்டாஃப் வானியை சுட்டுக்கொள்ளும் போது காயம் ஏற்பட்டு வீர மரணம் அடைகிறார் என்பதே ‘அமரன்’ படத்தின் உணர்ச்சிகள் நிறைந்த கதை.