அக்கரன் திரை விமர்சனம்

வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்) தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) என்ற இரு மகள்களுடன் மதுரையில் சந்தோசமாக வசிக்கிறார். மூத்த மகள் வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காக சிறை சென்று வந்ததால் அந்த திருமணத்துக்கு வீரபாண்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் வெண்பா அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம் படிக்க, முன்னாள் எம்.பி.யின் மைத்துனரால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருக்கும் போது, பயிற்சி மையத்தில் மறைமுகமாக மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தில் ஈடுபட இந்த அப்பட்டமான மோசடியை பிரியா தனது செல்போன் மூலம் வீடியோ எடுக்கிறார் அதனை கொண்டு அவர்களை எதிர்க்கிறார், அடுத்து அந்த பயிற்சி மையத்தில் இருந்து அந்த சம்பவத்திற்குப் பிறகு பிரியா காணாமல் போகிறார். விசாரணையின் போது அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவளது வயதான அப்பா வீரபாண்டி உண்மையை கண்டறிந்து கொடூரமாக சித்திரவதை செய்து பழிவாங்கும் போது சஸ்பென்சான திருப்பத்துடன் வயதான அப்பா வீரபாண்டி எதிரியை பழிதீர்த்தர ? அல்லது பிரியா (பிரியதர்ஷினி) கொன்றவரை யார் கொன்றது? போன்ற கேள்விக்கு பதில் தன இந்த அக்கரன் பாசமிகு ஒரு அன்பான தந்தையின் பழிவாங்கும் திரைகதை .
எம்.எஸ்.பாஸ்கர் பாசமிகு தந்தையாகவும், வில்லன்களை பழி வாங்கும் போது அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும், இரண்டு விதமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கபாலி விஸ்வந்த் (சிவாவாக), நமோ நாராயணா (பரந்தாமனாக), வெண்பா (மூத்த மகள் தேவியாக), பிரியா தர்ஷினி (இளையமகள் பிரியாவாக), வில்லன்களாக கார்த்திக் சந்திரசேகர் (ஒரு கவுன்சிலராகவும் பினாமியாகவும் செல்வம்) மற்றும் அகாஷ் பிரேம்குமார் (அர்ஜுனாக) உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டு சிறப்பான நடிப்பை திரையில் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் .
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – எஸ்.ஆர்.ஹரி, எடிட்டர் – பி.மணிகண்டன், ஸ்டண்ட் – சரவெடி சரவணன் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் த்ரில்லர் ஜானருக்கு என்ன தேவையோ அதை பூர்த்தி செய்து இருக்கிறார்கள்.திரைக்கதை அமைத்து கடைசியில் ஒரு ட்விஸ்ட்டுடன் திரைக்கதை அமைத்து உள்ளார் அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத்.