ரத்னம் திரை விமர்சனம்-indiastarsnow.com

“மம்மி சென்டிமென்டில் டம்மியான ரத்னம் படம்”
திரை கதையின் நாயகன் ரத்னம் சிறு வயதில் தாயை இழந்த ரத்னம் (விஷால்) தன்னை அரவணைக்கும் (சமுத்திரகனி) பன்னீர் செல்வத்துக்காக கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்துக்குச் செல்கிறார் ரத்னம் (விஷால்). தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம் எல் ஏவாக மாறியிருக்கிறார் பன்னீர் செல்வம் வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி “மல்லிகா” ப்ரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்க்கும் ரத்னம் (விஷால்), அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு கும்பல் “மல்லிகா” ப்ரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து அவரை காப்பாற்றும் விஷால், அந்த கும்பல் யார்?, எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, என்பதை தெரிந்துக்கொள்கிறார். பின்பு திரையில் ரத்தம் தெறிக்க தெறிக்க வேகமான காட்சிகளைக் கொண்டு கதை சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரி,ரத்னம் (விஷால்) மல்லிகா மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கு என்ன காரணம்? மல்லிகாவை வில்லன்கள் கொல்லத் துடிப்பது ஏன்? இதுபோன்ற கேள்விக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க திரையில் “பாசம்” “ரத்தம்” போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த ‘ரத்னம்’.
தமிழக – ஆந்திர எல்லையில் நிலப் பிரச்சனை கதைக்களத்தை அமைத்திருக்கும் ஹரி, தாய்ப் பாசம், மதுவுக்கு எதிரான வசனங்கள், அரசியல் சார்பு வசனங்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். ஆனால் நாயகன் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி ரசிக்க வைத்துள்ளார் .
சமுத்திரக்கனி ,யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் ,விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் திரையில் ரசிக்கவைத்துள்ளார் .முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் திரையில் மிரட்டியுள்ளார் .
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஆக்ஷன் விருந்தாக காட்சிகள் வருவதால்,ரசிகர்களை குஷிபடுத்த திரைப்பட குழு புது முயற்ச்சியாக ஒரே ஷாட்டில் சண்டை கட்சி திரையில் அணை வரும் வியக்கவும் வைத்திருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு .