Remove term: ‘ஒயிட் ரோஸ்’ திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com ‘ஒயிட் ரோஸ்’ திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com
கணவன் -மணைவி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு (பெண் குழந்தையுடன் )சந்தோசமாக வாய்ந்து வருகின்றனர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகளுடன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக திவ்யாவை ( கயல் ஆனந்தி )கணவர் அஷ்ரஃப் போலீஸ் சாரல் சுட்டு கொல்லப்படுகிறார்.
கணவரின் மரணத்திற்குப் பிறகு, அஷ்ரஃபுக்கு கடன் கொடுத்த கொடுத்தவர்கள் திவ்யாவை தொந்தரவு செய்யத் தொடங்குகிறார்கள், அதில் ஒருவர் திவ்யாவை ( கயல் ஆனந்தி ) குழந்தை கடத்தி பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு இரண்டு நாளில் தனது பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றனர் இல்லையெனில் உனது குழந்தையை வெளிநாட்டில் உள்ள விபச்சாரக் கூடத்திற்கு விற்கப் போவதாக மிரட்டுகிறார்.
தன் குழந்தையைக் காப்பாற்ற திவ்யாவை ( கயல் ஆனந்தி ) ஒரு பாலியல் தொழிலாளியாகிறாள். ஆனால் அவளுடைய முதல் வேலையில்,தனது வாடிக்கையாளர் வித்தியாசமாக உள்ளதை உணர்கிறாள் மற்றும் கழிவறையில் பெண் விரல் துண்டு ஒன்றைக் காண்கிறார் மற்றும் தன்னுடன் இருப்பவன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கொன்றவன் என்பதையும், தனையும் அவன் கொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும் திவ்யா உணர அங்கு அவர் போன்க்கு டவர் கிடைக்காததால் போலீஸ் உதவியை நாடுகிறார் பாலியல் தொழிலாளிகளை கொலை செய்பவரிடம் அவர் சிக்கியது எப்படி?, பெண்களை கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையோடு, சொல்வது தான் ‘ஒயிட் ரோஸ்’.
கயல் ஆனந்தி, திரையில் தனது அழுத்தமான கதாபாத்திரத்தின் கதைக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து நடித்துள்ளார்
சிறப்பான நடிப்பின் மூலன் சைக்கோ கொலையாளி நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வசனம் பேசாமல் நடித்திருக்கிறார். இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணி தனது நடிப்பின் மூலம் சிறப்பாக நடித்துள்ளார் .
கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என அனைவரும் திரையில் சிறப்பாக நடித்துள்ளார் .
ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் தங்கள் பணி மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளார்.
திரை கதை எழுதி இயக்கியிருக்கும் கே.ராஜசேகர் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை திர்லிங்காக திரை கதை அமைத்துள்ளார் .