
அனைத்து ஆண் மகனுக்கும் “குடிக்கு அடிமையான ” அனைவருக்கும் சடையால் அடித்தது போல் இருந்தது இந்த ‘ஆலகாலம்’.
தற்போது உள்ள ஆண்மகன்களின் நிலைமையை சிறப்பாக திரையில் பார்த்து சிந்திக்கும் அளவுக்கு சிறப்பான திரைப்படம் ‘ஆலகாலம்’ ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை முதல்முறையாக இயக்கியும் தயாரித்தும் கதையின் நாயகனாக திரையில் ஜொலித்துள்ளார் ,
கதையின் நாயகன் ஜெய கிருஷ்ணாவும் ஒழுக்கம், கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மாணவனாகத் கல்லுரியில் திகைக்கிறார் அவர் உடன்படிக்கும் மாணவி சாந்தினிக்கு நாயகன் மீது காதல் ஏற்பட்ட இருவரும் காதல் திருமணம் செய்துகொள் இது கல்லுரிக்கு தெரியவர இருவரையும் கல்லுரி நிர்வாகம் இருவரையும் கல்லுரியில் இருந்து வெளியேற்றுகிறது பின்பு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றனர் அப்போது நாயகன் வேலை தேடியும் கிடைக்காததால் எலெக்ட்ரிசன் வேலைக்கு சென்று தன் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக்கொள்கிறார் அப்போது தன்னுடன் வேலை செயும் நண்பன் மூலம் குடிக்க தொடங்கும் நாயகன் அதற்கு அடிமையாகிறார்ன் இந்த காதலால் ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது அதன் விளைவாக ஒரு காலையும் இழந்து , ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் மதுப்பழக்கத்தால் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை சொல்வது தான் ‘ஆலகாலம்’.
நாயகன் தன்னுடைய நிலைமை அம்மாவுக்கு தெரியக்கூடாது என்பது ஒரு புறம், காதலித்த மனைவியை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இன்னொரு புறம், அவள் வயிற்றில் தன் குழந்தையும் வளர அந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு பொறுப்புகள் அதிகமாக, அத்தனையையும் ஒரு கட்டத்தில் மறந்து குடிக்கு அடிமை ஆவது தன் ஆண் மகனின் சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திரை கதை சிறப்பாக அமைந்துள்ளது .
காதலித்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்கிற ஒரே கொள்கையுடன் வசதியான வாழ்க்கையையும், கல்வியையும் ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு வரும் சாந்தினியின் நிலைமையினை திரையில் பாக்கும்போது அவர் நடிப்பு மிக சிறப்பு .