‘நேற்று இந்த நேரம்’ திரைப்பட விமர்சனம்

ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட இளைஞர் குழு ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது.அங்கு விடுதியில் (RESORT)தங்குகிறாரார்கள் அப்போது காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் காணாமல் போகிறார். அது பற்றி போலீசில் புகார் அளித்து, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.
விசாரணை என்ற கோணங்களில் இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர், திரைக்கதையை வித்தியாசமாக கையாண்டிருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது திரை கதைக்கு மிக பெரிய பலவீனமாக உள்ளது .
இன்றைய இளைய தலைமுறையின் (காதல்) உடல் சுகத்துக்கான அத்துமீறல், போதைப் பழக்கம் என எல்லாவற்றையும் வெளிப்படையாய் காட்சிப் படுத்தி ஒரு விழிப்புணர்வு பாடமாக இயக்குனர் சாய் ரோஷன் கொடுத்துள்ளார்.
விஷால்.எம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கெவினின் இசை & பின்னணி இசையிலும் சிறப்பு .
படத்தொகுப்பாளர் கோவிந்த்துக்கு இது சவாலான படம்.