
மர்மநபர் நாயகி சந்தியாவை(பிரியங்கா திம்மேஷ்) கொலை செய்ய முயல்வதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.நாயகி (பிரியங்கா திம்மேஷ்) சந்தியா கொலையாளியிடம் இருந்து தப்பிக்க முயலும்போது, கூலி படையினறால் இயக்கப்படும் ஒரு வாகனம் அவள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது அப்போது சந்தியாவின் கணவர் ரகு அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்.
விபத்தில் அடிபட்ட சந்தியாவை அவளது கணவனான ரகு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றுகிறார். உயிர் பிழைத்தாலும் சந்தியா தன்னுடைய கடந்த கால நினைவுகள் அனைத்தையும் இழக்கிறார். கணவர் உட்பட எவரையும் அவளால் அடையாளம் காண முடியவில்லை.
தன் கணவன் ரகு என அறிமுகமாகும் ஸ்ரீகாந்தை தன் கணவன் என நம்பத் தொடங்குகிறாள். சில மாதங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக கடற்கரை ஓரம் அமர்ந்து இருக்கும் பொது அவளது தோழி சந்தியாவை சந்திக்கிறார் அப்போது தனது தோழியிடம் விபத்தில் தனது நினைவுகள் அனைத்து இயைந்து விட்டதாக கூற சந்தியா தோழி அவர் கணவர் ரகுவின் திருமண புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்புகிறார்.
அப்போதுதான் தனது கணவர் ரகு என்ற பெயரில் இருக்கும் ஸ்ரீகாந்த் ரகு இல்லை என்பதையும், அவன் பெயர் விக்னேஷ் என்பதையும், விக்னேஷ் (ஸ்ரீகாந்த்) பணத்திற்காக கொலை செய்யும் கொடூர குற்றவாளி என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் ஸ்ரீ காந்தை தாக்கிவிட்டு வெளியேறுகிறார்.
காவல்துறை அதிகாரியான எட்வர்ட் (ஹரிஷ் பெராடி)டின் உதவியுடன் தன்னை திருமணம் செய்து கொண்ட ரகு ( வியான்) உடன் இணைகிறார். ஆனால் ரகுவின் நடவடிக்கை புதிராக இருக்கிறது. தன்னை விபத்திலிருந்து விக்னேஷ் காப்பாற்றி, இரண்டு மாதமாக இரண்டு மாத கால அளவிற்கு ஏன் அடைக்கலம் கொடுத்தார்? என்பது சந்தியாவிற்கு விடை தெரியாத வினாவாக அவள் மனதில் எழுகிறது அத்துடன் தன்னை கொலை செய்வது யார்? என்று கேள்வியும் அவளுக்குள் எழுகிறது. இதற்கான விடையை சொல்வதுதான் ‘சத்தமின்றி முத்தம் தா’ படத்தின் பரபரப்பான திரில்லராணா திரைக்கதை.
நாயகியின் பள்ளி பருவத்து தோழனாக வரும் விக்னேஷ் கதாபாத்திரத்தில் தன்னுடைய வழக்கமான அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார். பள்ளி பருவ நாயகியாக நடித்திருக்கும் அவர் நடிப்பு திரையில் மிக சிறப்பு .
ரகுவின் கள்ள காதலியாக நடித்திருக்கும் ஷீலா ( நிஹாரிகா பாட்ரோ) வின் கவர்ச்சியும், ஐட்டம் சாங்கு ரசிகர்களுக்கு திரையில் ரசிக்கும்படியாக உள்ளது .
பொலிஸ் அதிகாரி எட்வர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஹரிஸ் பெராடி இயல்பாக நடித்திருக்கிறார்.
ரகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் வியான் குறிப்பாக சண்டை காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
எம். யுவராஜ் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது . ஜுபினின் பின்னணி இசை திரில்லர் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது .