’நினைவெல்லாம் நீயடா’ திரை விமர்சனம் -indiastarsnow.com
தயாரிப்பு : லேகா தியேட்டர்ஸ்
நடிகர்கள் : பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லீ, மதுமிதா, மனோபாலா மற்றும் பலர்.
இயக்கம் : ஆதி ராஜன்

பள்ளி பருவத்தில் தொடர்ந்த காதல் காலம் கடந்தும் அந்த காதல் (மலர்ந்ததா ) இணைந்தத என்பதே ’நினைவெல்லாம் நீயடா’ திரை கதை பள்ளிப்பருவ நடிகர் கௌதம் ( ரோஹித் – யுவலட்சுமி ) மற்றும் மலர்விழி ( பிரஜின் – சினாமிகா) இருவரும் காதலிக்கிறார்கள். கௌதம் தனது காதலை மலர்விழியிடம் கடிதம் மூலம் சொல்கிறார். மலர்விழி காதலருக்கு விருப்பமான இசைக்கருவியுடன் தனது காதலை வெளிப்படுத்துகிறார் திரையில் ஆனால் காதலுக்கான பதில் கிடைக்கவில்லை. அவள் தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொள்கிறார் கௌதம் ( பிரஜின்) நண்பர்கள் வெளிநாட்டிற்கு சென்ற மலர்விழி.. அங்கு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் நீயும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி, கௌதம் ( பிரஜின்)அன்பிற்காக ஏங்கும் அத்தை பெண்ணிற்கு ( மணிஷா யாதவ்) திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் மலர்விழியை மறக்க இயலாமல் கௌதம் தவிக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து மலர்விழி தனது தோழி தங்கை திருமணத்திற்கு சென்னைக்கு வருகிறார். மலர்விழியின் காதல் வென்றதா? திருமணமான கௌதம் தன் காதலி ஏற்றுக் கொண்டாரா? என்பதுதான் ’நினைவெல்லாம் நீயடா’ திரை கதை.
பள்ளிக் காதலர்களாக ரோஹித் மற்றும் யுவஸ்ரீ.. இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது…
பிரஜனின் நண்பனாக ரெடின் கிங்சிலீ காமெடியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
தோழியாக ஜாங்கிரி மதுமிதா திரையில் ரசிக்க வைக்கிறார் .
யுவஸ்ரீ பள்ளி தோழியாக அபி நட்சத்திரா கொடுக்கப்பட்ட பள்ளி மாணவி கேரக்டரில் திரையில் நம்மை கவர்கிறார்..
