‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ திரை விமர்சனம்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ படம் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளது . (டிசம்பர் 8ஆம் தேதி ) இன்று திரையரங்குகளில் வெளியானது..
கேபி (சதீஷ்) கேமிங் துறையில் வேலை தேடடி வருகிறார் அப்பொழுது,கேபி (சதீஷ்) வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து Dream catcher-ல் இருந்து ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார், கேபி (சதீஷ்) . இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். கனவுலகில் உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழலும் உருவாகிறது.இதனால் உறங்கும் போதெல்லாம் அவரது கனவில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன், எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையாகப் பேய் ஓட்டும் நிபுணராக நாசர், பேய் ஓட்டுபவராக வரும் ரெஜினா கேசன்ட்ரா , மனநல மருத்துவர் ரெடின் கிங்ஸ்லி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் ,அப்பா விடிவி கணேஷ்,மாமா நமோ நாராயணா, ஆதித்யா கதிர் என அனைவரும் அந்த இறகினை அடுத்தடுத்து பறித்துவிட எல்லோரும் கனவில் ஒன்றாகப் போய் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த விநோதமான பொருளின் பின்னணி என்ன, பேய்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், கனவிலிருந்து மீண்டார்களா என்ற கேள்விகளுக்கான பதிலை ஃபேன்டஸி கலந்த காமெடியாகக் கொடுத்திருப்பதே இந்த ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’.
“கன்ஜூரிங் கண்ணப்பன்” திரை படத்துக்கு பின்னணி இசையைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. இருள் கலந்த மாய உலகத்துக்கான ஒளியுணர்வை சிறப்பாகக் திரையில் ரசிக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. கனவுலகம் நிஜ உலகம் என மாற்றி மாற்றி வரும் காட்சிகளை திரையில் சிறப்பாக
தொகுதுள்ளார் பிரதீப் இ.ராகவ். , பிளாஷ்பேக் காட்சிகளில் அரண்மனை கட்சி கலை இயக்கத்தில் சிறப்பாக அளித்திருக்கிறார் மோகன மகேந்திரன். கிராபிக்ஸ் மற்றும் மேக்கப் திரையில் மிரட்டுகிறது .