கிறிஸ்தவ பாதிரியாராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். பாதிரியாராக இருக்கும் கே.பாக்யராஜின் மற்றொரு முகமும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த அந்த பொருளும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.
கதையின் மற்றொரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் பிஜிஎஸ், ஆர்வம் மிக்க இளைஞராக இருப்பதோடு, தனது அழுத்தமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
முழு படமும் கிறிஸ்தவ தேவலாயத்திற்குள் நடந்தாலும், வித்தியாசமான கோணங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் மோகன் குமார், கடுமையாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா, பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஆர்.கே.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு, ஸ்ரீமன் பாலாஜியின் கலை இயக்கம் ஆகியவையும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மிகப்பெரிய கண்டுபிடிப்பை மையக்கருவாக வைத்துக்கொண்டு அறிவியல் புனைக்கதையை மிக எளிமையாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஷிவ மாதவ், முதல் பாதியில் போடும் மர்ம முடிச்சுகளை இரண்டாம் பாதியில் அவிழ்ப்பது திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு திருப்புமுனைக்கும் பின்னால் உள்ள காரணத்தை விவரிக்கும் போது படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுவதோடு, எதிர்ப்பார்க்காத க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல்.