இறைவனின் திருப்தியையும், அருளையும் நமக்குப் பெற்றுத் தரும் ஒரு அற்புதமான செயல்.
ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது,இறைவனுக்கு நாம் கொடுக்கும்
“அழகிய கடன்” என்பது வேத வாக்கு.
ஒவ்வொரு தனி மனிதனும்
தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மத்திற்காக என்று
ஒதுக்கி, அதை ஒரு கடமையாகச் செய்வது,
உலகத்தின் வறுமை ஒழிப்புக்கான தத்துவம்.
தர்மம் செய்வதை, முதலில் நம் தெருவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி இருப்போரில் பலர்,
வறுமையால் வாடியும், யாரிடமும் வாய்
திறந்து கேட்காமல், மானத்துக்கு அஞ்சி,
வேதனையில் உழன்று கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களை நாம் கண்டறிந்து,மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல்
உதவ வேண்டும். அது தான்,
உண்மையான தர்மம்.
அது தான்,இறைவனுக்கு நாம் கொடுக்கும் அழகிய கடனாகும். இந்தக்கடனை,
இறைவன் நாம் அறியாத வழிகளிலிருந்து, பன் மடங்காக நமக்கு திருப்பித் தருவான்.
தர்மம் செய்வதை, நம் தெருவில் இருந்து
ஆரம்பித்து, அடுத்து வட்டாரம், ஊர்,
மாவட்டம் என்று நம் வசதிக்கு ஏற்பவிரிவு படுத்தி கொள்ள வேண்டும்.
வறுமையில் வாடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தான் நேரடியாக உதவ வேண்டும்.
இதில் மூன்றாம் மனிதர் மூலமாகச் செய்தால், வீண் விளம்பரமாகி, நாம்
செய்த தர்மத்தின் பலன் நமக்கு கிடைக்காததோடு, அந்த மூன்றாம் மனிதர் ஊழல் செய்யவும் நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலாகி விடும்.
எக்காரணத்திற்காகவும்,
சேவை மையங்கள் என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
அவற்றில் பெரும்பாலானவை
ஏமாற்று மையங்களே.