Largest epidemiological study on Diabetes and NCDs in India
· இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட முதலாவது விரிவான ஆய்வு அறிக்கையில், தொற்றா நோய்களின் மாபெரும் அளவிலான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
· கிட்டத்தட்ட அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும் (NCDs) கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன மற்றும் அதிக விகிதங்களையும் காட்டுகின்றன.
· தொற்றா நோய்களின் (NCDs) பரவலில், மாநிலங்களுக்கு இடையே பலதரப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.
· மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில், நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்ந்து ஒரே சீராக இருப்பது போலத் தோன்றுகிறது, அதேசமயம் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில், நீரிழிவு நோயின் தாக்கத்தின் பரவல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில், 8 ஜூன் 2023: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நிதியுதவியுடன் நடத்தப்பட்ட விரிவான தொற்றா நோயியல் ஆய்வு அடிப்படையிலான ஓர் புதிய ஆய்வுக் கட்டுரை, உலக அளவில் பெரிதும் அங்கீகரிக்கப்படும் “தி லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பியில்” (The Lancet Diabetes and Endocrinology) என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட “இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் – இந்திய நீரிழிவு நோய் (ICMR-INDIAB)” என்ற ஆய்வின் முடிவுகள் அடிப்படையிலான கட்டுரையில், இந்தியாவில் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் (NCDs) தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. நாட்டின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள, மொத்தம் 1,13,043 நபர்கள் உள்ளடக்கிய 33,537 நகர்ப்புற மக்களிடமும் மற்றும் 79,506 கிராமப்புற மக்களிடமும் பெறப்பட்ட மாதிரியை எடுத்து, இந்த ஆய்வுக்கு பல கட்ட வடிவமைப்பைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தனித்துவமான சிறு குழுக்களாகப் பிரித்து, குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த நபர்களிடத்தில் குறிப்பிட்ட நேரத்தில், மக்கள் தொகை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, இந்திய நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை உள்ளடக்கிய இந்த மிகப்பெரிய அளவில் பெறப்பட்ட மாதிரியைப் பயன்படுத்தி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், டிஸ்லிபிடெமியா (Dyslipidaemia) போன்ற வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் பரவலை மதிப்பீடு செய்தது. மேலும், நாடு முழுவதும் உள்ள இந்தத் தொற்றா நோய்களின் பரவலில், அந்தந்த மண்டல மற்றும் மாநில அளவிலான மாறுபாடுகளையும் அடையாளம் கண்டறிந்தது.

ICMR-INDIAB ஆய்வு முடிவுகள்
தொற்றா நோய்கள் (NCDs) தேசிய அளவிலான நோய்ப்பரவல் இந்தியாவில் பல கோடிக்கணக்கில் மதிப்பிடப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிக நோய்ப்பரவல் உள்ள மாநிலம் மிகக் குறைந்த நோய்ப்பரவல் உள்ள மாநிலம்
நீரிழிவு நோய் 11.4% 101 கோவா (26.4%) உத்தரப் பிரதேசம் (4.8%)
ப்ரீ டயாபடீஸ் 15.3% 136 சிக்கிம் (31.3%) மிசோரம் (6.8%)
உயர் ரத்த அழுத்தம் 35.5% 315 பஞ்சாப் (51.8%) மேகாலயா (24.3%)
உடல் பருமன் 28.6% 254 புதுச்சேரி (53.3%) ஜார்கண்ட் (11.6%)
அடிவயிற்று உடல் பருமன் 39.5% 351 புதுச்சேரி (61.2%) ஜார்கண்ட் (18.4%)
ஹைபர்கொலெஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) 24.0% 213 கேரளா (50.3%) ஜார்கண்ட் (4.6%)

நகர்ப்புற மற்றும் கிராமப்புற வித்தியாசம்: இயல்பான இரத்த சர்க்கரை அளவுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடைப்பட்ட நிலையைத் தவிர, மற்ற அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக விகிதங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு மற்றும் பிற தொற்றா நோய்களுக்கான (NCD’s) புதிய தேசிய மதிப்பீடுகள்: எங்கள் ஆய்வின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாலும், 136 மில்லியன் மக்கள் இயல்பான இரத்த சர்க்கரை அளவுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடைப்பட்ட நிலையாலும், 315 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தாலும், 254 மில்லியன் மக்கள் பொதுவான உடல் பருமனாலும், 351 மில்லியன் மக்கள் அடிவயிற்று உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. மேலும், 213 மில்லியன் மக்கள் ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவால் (Hypercholesterolemia) அவதியுற்று இருந்தார்கள்.
இது குறித்து, டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் (DMDSC) நிர்வாக இயக்குநரும், மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) தலைவருமான டாக்டர். ஆர். எம். அஞ்சனா கூறுகையில், “இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் பெரும் உதவியுடன் இத்திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பு மையம் மூலம் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷனின் (MDRF) இந்த மாபெரும் பணியை முன்னெடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இந்த விரிவான அறிக்கை, நாட்டில் தொற்றா நோய்கள் (NCDs) தொடர்பான சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் நாடு முழுவதும் பரவியுள்ள தொற்றா நோய்களின் (NCDs) நம்பகமான மற்றும் கணிசமான மதிப்பீடுகளை வழங்குவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் (NCDs) பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீரிழிவு குறுந்தொற்று நோயின் பரவல் வேகமும், பரவல் முறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சில மாநிலங்கள் ஏற்கனவே உச்ச கட்ட விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் இப்போதுதான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும் (NCDs) நகர்ப்புறங்களில் அதிகம் காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் முன்பு கண்டறியப்பட்டதை விடக் கணிசமான அளவுக்கு அதிகப் பரவல் விகிதங்கள் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது” என்று கூறினார்.
டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் (DMDSC) மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) ஆகியவற்றின் தலைவரும், ஆய்வின் மூத்த ஆசிரியருமான டாக்டர் வி.மோகன் இது குறித்து மேலும் கூறியதாவது, மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) உறுப்பினர்களின் அர்ப்பணிப்புமிக்க, பாராட்டத்தக்க முயற்சிகளால், தற்போது உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் அதிகரிப்பை எங்களால் வெற்றிகரமாக மதிப்பீடு செய்ய முடிந்துள்ளது. எங்கள் ஆய்வின் முடிவுகள் இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பை திட்டமிடுவதற்கும், அது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளன. இந்தத் தொற்றா நோய்கள் பற்றிய விரிவான மாநில அளவிலான தரவுகள், தொற்றா நோய்களின் பாதிப்பை வெற்றிகரமாக நிறுத்துவதற்கும், அவற்றின் சிக்கல்களைத் திறம்படக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், இந்தியாவில் உள்ள மாநில நிலை தரவு சான்றுகள் மூலம் இடையீட்டுச் சேவைகளை உருவாக்கி, அந்தந்த மண்டலங்களில் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்குப் பெருமளவில் உதவும் என்று கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தொற்றா நோய் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். தாலிவால், விஞ்ஞானி ‘G’ மற்றும் டாக்டர் தன்வீர் கவுர், விஞ்ஞானி ‘G’ – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தொற்றா நோய் பிரிவு, இருவரும் தாங்கள் ICMR – INDIAB ஆய்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதற்காகத் தங்கள் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஆய்வுக்காக முதலீடு செய்யப்பட்ட நீண்ட காலம், கடின உழைப்பு, சிறந்த ஆராய்ச்சிமுறை ஆகியவற்றின் விளைவாக, இது தொடர்பான ஆராய்ச்சித் துறையில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளுக்கும், முன்னேற்றங்களுக்கும் வழி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தொற்றா நோய் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். தாலிவால், விஞ்ஞானி ‘G’ தொடர்ந்து பேசும் போது, “ஆய்வின் முடிவுகள் இந்திய மக்கள்தொகையில் கணிசமான பகுதி மக்கள் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களால் ஏற்படும் கார்டியோவாஸ்குலர் (இதயம் மற்றும் இரத்தக்குழல்) நோய் மற்றும் பிற நீண்ட கால உறுப்புக் கோளாறுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன” என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கான தேசிய ஒருங்கிணைப்பு மையமாக இருக்கும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF), இந்தத் திட்டப்பணியை விரிவாக திட்டமிட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடித்தது. 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் மற்றும் நாட்டின் தலைநகர்ப் பகுதியான டெல்லி ஆகிய அனைத்துப் பரப்புகளையும் சேர்ந்த 1,13,043 நபர்களிடம் மிக விரிவான மாதிரி அளவுகளை பெற்று இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் 8 ஜூன், 2023 அன்று உலக அளவில் பெரிதும் அங்கீகரிக்கப்படும் மதிப்புமிக்க “தி லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பியில்” (The Lancet Diabetes and Endocrinology) என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு: https://www.thelancet.com/journals/landia/article/PIIS2213-8587(23)00119-5/fulltext