Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள்

Posted on June 1, 2019

சென்னை:
தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கையில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்கள் அனைவரும் தூய்மையான நேர்த்தியான உடை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் ஊழியர்களின் உடைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஆண்கள் ஃபார்மல்ஸ் பேண்ட், ஷர்ட் மட்டுமே அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகளை அணியலாம் என்றும் ஆடைகளின் நிறம் அடர்த்தியாக இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா அணிவது காட்டாயம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பாயங்களில் ஆஜராகும் போது பெண் ஊழியர்கள் இதே விதிமுறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்களின் ஆடைகள் அடர் வண்ணத்தில் பிறரின் கண்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது எனவும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட் அணிந்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme