ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்
தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கடந்த 25ம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலக முன்வந்தும், அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கவில்லை. இருப்பினும், தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்ற முடிவில் ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேலும், கே.சி.வேணுகோபாலும் நேற்று அவரை சந்தித்தபோது, தலைமைப் பதவிக்குரிய நபரை தேடுமாறு ராகுல்காந்தி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக கமிட்டி கூட்டத்தை மீண்டும் கூட்டுவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து? வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.