Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லில்லி ராணி திரை விமர்சனம்

லில்லி ராணி திரை விமர்சனம்

Posted on September 13, 2022

புதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும்.

இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தை ஏற்ற அளவில் சாயா சிங்கைப் பாராட்டலாம்.

விலை மாதுவாக இருக்கிறார் சாயா சிங். ஒரு நாள் போலீஸ் ரெய்டு நடத்தும் தம்பி ராமையா, சாயா சிங்கின் அழகில் மயங்கி அவருடன் உடலுறவு கொள்கிறார்.

சில மாதங்களுக்கு பின் சாயா சிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். சாயா சிங்கின் குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் பாதிப்படைந்த குழந்தையுடன் சாயா சிங் டாக்டரிடம் செல்ல, பரிசோதித்த டாக்டர் குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் பல லட்சங்கள் செலவாகும் என சொல்கிறார்கள்.

பலருடன் உடலுறவு வைத்துக்கொண்ட சாயா சிங், தன்னிடம் உடலுறவு கொண்டவர்களில் குழந்தைக்கு தந்தை யார்? என கண்டுபிடித்து அவரிடம் இருந்து மருத்துவ செலவுக்கான பணத்தை வாங்க முயற்சி செய்கிறார். முதலில் போலீசான தம்பி ராமையாவை தேடி பிடித்து அவரிடம் உதவி கேட்கிறார்.

ஆனால் தம்பி ராமையா தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வதோடு, சாயா சிங்குடன் உடலுறவு கொண்டவர்களில் ஒருவரான அமைச்சரின் மகனிடம் குழந்தை மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை இருந்து பறிக்க திட்டம் போட்டு தருகிறார்.

தம்பி ராமையாவும், சாயா சிங்கும் போடும் திட்டத்தின் மூலம் அமைச்சர் மகனிடம் இருந்து பணம் பறித்தார்களா? சாயா சிங் குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாயா சிங், விலை மாதுவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் மொழியில் கவர்ச்சியில்லாமல், காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் சாயா சிங் கதாபாத்திரத்தை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
போலீசாக வரும் தம்பி ராமையா, அமைச்சரின் மகனாக துஷ்யந்த், பேபி ர ஃஅத் பாத்திமா, மந்திரியாக ஜெயபிரகாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். சில காட்சிகளில் திரைக்கதையின் வேக தடை இருந்தாலும், விலை மாது சம்பந்தப்பட்ட அழுத்தமான கதை என்பதால் சொல்ல வந்த கதையை அனைவரும் ரசிக்கும்படி தெளிவாக, மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம்.

சிவா தர்ஷனின் ஒளிப்பதிவும், ஜெர்வின் ஜோஷுவாவின் இசையும் சேரனின் பின்னணி இசையும் கதைக்கேற்றபடி சிறப்பாக உள்ளது.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme