.M/s. Dream Warriors நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் திரு.சூர்யா அவர்கள் நடிப்பில் இன்று 14.5.2026, தங்களது Qube service provider மூலம் இந்தியா முழுவதும் வெளியாக இருந்த “கருப்பு” திரைப்படத்தினை சம்பந்தபட்ட தயாரிப்பாளர், பைனான்சியர் அனுமதியின்றி எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல், தங்களது நிர்வாகத்தின் கவன குறைவால் கருப்பு திரைப்படம் தொடர்பாக கியூப் நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எழுதிய கடிதம்.out permission Producer/Financiar KDM was opened in North India) தமிழ் சினிமாவில் இதுநாள் வரையில் இது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை. இதுவே முதல் முறை. இந்த விஷயமானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.மேலும், இதுபோன்ற விஷயங்களால் தயாரிப்பாளர்களின் content -க்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.மேற்படி தங்களது நிர்வாகத்தின் கவன குறைவால் கருப்பு திரைபடத்தின் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய அளவில், ரூ.150 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அறிந்ததும் படத்தின் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் QUBE நிறுவனத்திற்கு மதியம் 2 மணி அளவில் நேரில் வந்து இரவு 9 வரை காத்திருந்தும், தங்களது நிர்வாகத்திலிருந்து யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை, மேலும் நிர்வாகம் சார்பில் நேரில் சந்தித்து பேச வரும் அறிகுறியும் தென்படவில்லை.ஆகவே அவசர நிலையாக கருதி உடனடியாக மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தங்களது நிர்வாகம் எங்களது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள தயாரிப்பாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது QUBE Service provider க்கு தொழில் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

