
தமிழகத்தில் உள்ள அஸ்தினாபுரம் மலைக் கிராமத்தை நடக்கும் அமானுஷ்ய நிகழ்வை மைய ையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை சாத்தான் -தி டார்க் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படம் திரையில் திரைப்பதை நடிப்பு இசை என திரையில் காண்பவரை கதி கலங்க வைக்கிறது.
சாத்தான் -தி டார்க் 1600-களில் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் தொடங்கி, 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சி வழியாக 1980-களில் வரை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது இந்த மக்கள் இறை நம்பிக்கையை விட சாத்தான் வழிபாட்டிலேயே ஊறிப்போய் உள்ளனர். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நடந்த ஒரு தவறான மாந்திரீக சடங்கினால் அந்த ஊரில் ஒரு கொடூர சாபமும், கருப்பு சக்தியும் ஊடுருவுகிறது. இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் எழுப்பும் ஒரு மர்மமான புத்தகம் அங்கே இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த காலத்தில் விக்டோரியா (சாந்தினி தமிழரசன்) என்ற பெண், இறந்த தன் கணவனை இந்தப் புத்தகத்தின் மூலம் உயிர்ப்பிக்க முயன்று, தன் நாக்கையும் கட்டை விரலையும் அறுத்து பலிகொடுத்து பூஜை நடக்கும் பொழுது ஊர் மக்களால் தாக்கி கொல்லப்படுகிறார்.
தனது மாந்திரீக சக்தியை தனது அடுத்த தலைமுறை களை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கிறார் தற்போது, அந்த ஊரில் ஒரு தாய் (மோனா பத்ரே) மற்றும் அவரது இரு மகள்கள் (ஐரா மற்றும் தங்கை) வசிக்கிறார்கள். திடீரென அந்தத் தாயின் உடலில் விசித்திர மாற்றங்கள் ஏற்பட்டு அது கொடூர சிந்தனைக்கு ஆளாகிறார். அவர் சாத்தானின் ஊழியராக மாறுகிறார். அதே சமயம் ஊரில் மர்மமான மரணங்கள் நிகழ்கின்றன. மகள் ஐரா இந்தப் பயங்கரங்களுக்கு நடுவே சிக்கிக்கொள்கிறார்.
கிராமத்தில் நடக்கும் மர்மமான கொலை காரணம் என்ன?
உடல் கூறு செய்யும் மருத்துவர்களையே கதிகலங்க வைக்கும் மரணத்தின் உச்சம் ?
தனது கணவரை மீட்டெடுக்க ஒரு பெண் செய்யும் மயான பூஜையில் கணவரை உயிர்ப்பிக்க வைத்தாரா?
எஃப்.ஜே மீட்டெடுத்தாரா?
இது போன்ற கேள்விக்கு பதில் படத்தில் திரைக்கதை.