
நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித்இயக்கம்: ரியாஸ் மராத்ஒளிப்பதிவு: சுஜித் சாரங்இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்வெளியான தேதி: மார்ச் 6, 2026நேரம்: 2 மணி 32 நிமிடங்கள்ரேட்டிங்: 7.5 / 10

சமூகத்தில் மனிதர்கள் எடுக்கும் சில முடிவுகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் அமைந்துள்ள படம் தான் (அனாமி) மனிதர்கள் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்பட்டு சமூகத்தில் வாழ பிடிக்காமல் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் உளவியல்கள் (அனாமி) என்கிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கிரைம் திரில்லர் திரைப்படத்தை திரையில் ரசிக்கும் படி இயக்குனர் ரியாஸ் பாரத் இயக்கத்தில் திரைப்படம் வெளிவந்துள்ளது.
நாயகி பாவனா திரைப்படத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார் தனது கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை கையில் எடுக்கும் பாவனா திரை கதைக்கு நாயகியாக திகழ்கிறார்.மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு ஏற்படும் ஆர்வத்தின் காரணமாக மரணத்தை தொட்டு மீண்டும் உயிர்ப்பித்தவர்களை ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தனது கல்லூரியின் இறுதியாண்டு படிப்பாக இதனை தேர்வு செய்கின்றனர், அப்படி இரண்டு இளைஞர்கள் தேர்வு செய்யும் அந்த ஆய்வுக்கு ஒரு பெண்ணையும் துணையாக நினைக்கின்றனர் அந்த பெண்ணை கொண்டு ஒருவர் இறந்து மீண்டும் உயிர்ப்பித்தால் அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்கின்றனர் அதில் தோல்வி அடைகின்றனர் அந்தப் பெண் இறந்து விடுகிறார். ஆகையால் மருத்துவமனைக்கு தற்கொலை முயற்சி செய்யும் மனிதர்களை தேர்வு செய்து அவர்கள் உடம்பில் சில ரசாயன மருந்துகளைப் புவத்தி ஆராய்ச்சி செய்வதில் மூன்று பேர் உயிர் இறக்கிறார்கள் அவர்களில் ஒருவர் பாவனாவின் தம்பி.நடிகை பாவனாவின் குடும்பத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அப்பா அம்மா இருவரும் இறக்க தனது தம்பி உலகம் என்று வாழ்ந்து வருகிறார் தடயவியல் நிபுணர் பாவனா அப்பாவை மரணத்திற்குப் பிறகு தம்பியின் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அப்பொழுது மருத்துவமனையில் காணாமல் போகும் அவர் தம்பி சில நாட்களில் இறந்த நிலையில் கிடைக்கிறார் அவரை உடல் பிரேத பரிசோதனை செய்யும் பொழுது சில ரசாயன மருந்துகள் அவரது உடலில் இருந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.நாயகி தடவியல் நிபுணர் என்பதால் அதே முறையில் இன்னொருவரும் இறக்கிறார் அவரை தொடர்ந்து ஒரு பெண் ஒருவர் இறக்க மூவர் உடலிலும் ஒரே மாதிரியான ரசாயன மருந்துகள் புகுத்தப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை மருத்துவர் முடிவு செய்கிறார்.தனது தம்பியை கொன்ற நபர் யார் என்பதை தேடி செல்கிறார் தடைவையல் நிபுணர் பாவனா அப்பொழுது போலீஸ் உயர் அதிகாரியான நடிகர் ரகுமான் இணைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர் அதில் பல உண்மைகளை கண்டறிகின்றனர்.மூவரையும் கொலை செய்த நபரின் நோக்கம் என்ன?பாவனாவின் தம்பி கொலை செய்ய காரணம் என்ன? கொலையாளி என்ன நோக்கத்தோடு கொலை செய்ய முற்பட்டார்?
இது பன்ற கேள்விகளுக்கு பதிலே (அனோமி) திரைப்படத்தின் திரைக்கதை.