
இன்று திரையரங்கில் வெளியாகி மக்களின் (இளைஞர்கள்) பேராதனை பெற்று வந்துள்ள திரைப்படம் லவ் சஸ்கிரைப் ஷேர் இன்றைய இளைஞர்களின் காதலை கண்ணியத்தோடும் குடும்ப உணர்வோடும் நட்போடும் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது திரைப்படம்.
நாயகன் ஆதவ் கிருஷ்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் கணிதப் பாடத்தில் சிறந்த மாணவராக விளங்கும் அவர் தனது நண்பர்கள் படிப்பில் சந்தேகங்களை சேர்த்து வைக்கிறார் இதனால் கல்லூரியில் பெண்கள் ஆண்கள் என இருவருக்கும் விருப்பமான ஒருவராக திகைகிறார் கதையின் நாயகன்.

கதைய நாயகி சென்னை சவுகார்பேட்டையில் வளரும் அவர் அதே கல்லூரியில் பயின்று வருகிறார் இவருக்கும் கணித பாடத்தில் சந்தேகம் ஏற்பட நாயகன் உதவிய நாடுகிறார் இருவரும் நட்பாக பழக காலப்போக்கில் காதலாக மாறுகிறது.
நாயகியை நாயகன் குடும்பத்திற்கு பிடித்து போக. நாயகியின் குடும்பத்திற்கு நாயகனை பிடிக்காத காரணம் என்ன?
நாயகி தன்னைப் பிரிந்து சென்ற தாயை சந்திக்க காரணம் என்ன?
தாயைப் பார்க்க சென்ற நாயகியை கடத்தியது யார்?
இறுதியில் நாயகனும் நாயகியும் இணைந்தார்களா?
இறுதியில் காதல் வென்றதா பண பலம் வென்றதா என்பதே LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைக்கதை.
இந்த இளைஞர்கள் விரும்பும் வகையில் காதல் , குடும்ப பாசம், தவிப்பு,நட்பு, சமுதாயத்தில் அந்தஸ்து, இவைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் மகாலட்சுமி முருகன் .
திரைக்கதையில் முதல் பாதியை காதல் குடும்ப பாசம் கல்லூரியின் மாணவர்களின் நட்பு போன்ற முக்கோண கதைகளாக கொண்டு ரசிக்க வைத்துள்ளார்.
திரைக்கதையின் இரண்டாம் பாதியில் காசியில் தொலைத்த தனது காதலியை தேடி தேடி அலையும் சோகமான உணர்வையும் காதலின் ஆழத்தையும் உணர்த்தும் விதமாக திரைக்கதை அமைத்து இந்த வாரத்தில் ஒரு சிறந்த காதல் காவியமாக படத்தை திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது படக்குழு.
ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் ஆகியோர் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர் அனைவரின் நடிப்பு திரையில் ரசிக்கும் படி அமைந்துள்ளது மிக சிறப்பு .