
அருள் விஜய தேடி துப்பாக்கியுடன் உணவகம் ஒன்றுக்கு இருவர் வருகின்றனர் அவர்கள் அருண் விஜயால் துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்படுகின்றனர் அதன்பின் திரைப்படம் தொடர்கிறது .நாயகன் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான புதுச்சேரிக்கு வருகிறார். நாயகி உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் அவரை சந்தித்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார் ஆனால் நாயகி தான் வசதியான ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார் சோகத்தில் மது அருந்திக்கொண்டு சாலையை கடக்கும் போது விபத்தில் தன்னைப் போன்ற உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. கோவாவை சேர்ந்த உபேந்திரா பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து அவரது சொத்தை அபகரிக்க காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள்.
கோவாவை சேர்ந்த உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, காளியின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த ‘ரெட்ட தல’ .

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). தங்களது சிறுவயது வாழ்க்கை ஏழ்மையில் வளர்வதால் நாயகி தனது வாழ்க்கை பணக்கார நபருடன் வாழ வேண்டுமென்று முடிவெடுக்கிறார் அதனைத் தொடர்ந்து காளி மற்றும் உபேந்திரா இருவரும் தங்களது நடிப்பை திரையில் சிறப்பாக ரசிக்கும்படி கொடுத்துள்ளனர்..
கோவாவில் வாழும் உபேந்திரா என் பாண்டிச்சேரி வருகிறார்?
புதுச்சேரியை தாயகமாகக் கொண்ட காளி ஐந்து வருடம் பிறகு தன் சொந்த ஊருக்கு வருவது ஏன்?
நாயகி வசதியான ஒருவரை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்க முடிவு எடுத்தது ஏன்?
காளியின் உண்மை முகம் என்ன அவர் 5 வருடம் எங்கு இருந்தார்?
போன்ற கேள்விக்கு பதிலே ரெட்ட தல திரைப்படத்தின் திரைக்கதை.