
சென்னையைச் சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்), தாத்தா (ஜி.எம்.குமார்), தாய், தங்கையுடன் இயக்குனர் வாய்ப்பு தேடியும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாயகன் இயக்குநராகும் முயற்சியிலிருக்கும் குமரன், தயாரிப்பாளர் கிடைக்காமல் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் நாயகன்
.

நாயகன் இந்நிலையில், வீட்டை விற்று அப்பணத்தில் படம் இயக்க முடிவு செய்யும் போது, அதே வீட்டில் தனி அறையில் வசித்து (பல வருடங்களாக வாடகைதாரர் ) மற்றும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக ஆர்வலர் (மக்கள் பிரச்சனையை தட்டிக் கேட்பவர்) வரதராஜன் (இளங்கோ குமரவேல்) மர்மமான முறையில் நாயகன் வீட்டில் இறந்து கிடக்கிறார். இதனால், காவல்துறையில் விசாரணை வளையத்தில் குமரனும், அவரது குடும்பமும் சிக்கிக் கொள்கிறது.
மறுபுறம், வீட்டை விற்கும் முயற்சிகளுக்கும் தடைகள் வருகின்றன. வரதராஜனைக் கொன்றது யார்?,
நாயக வீட்டை விற்க முடிந்ததா? நாயகன் குமரன் இயக்குநர் ஆனாரா? போன்ற கேள்விகளுக்குப் திரையில் ரசிக்கும் படி பதில்களைச் சொல்லியிருக்கிறது பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமாரசம்பவம்’ திரைப்படம்.