சென்னை திருவான்மியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களையும், சில ஆண்களையும் குறி வைத்து பல கொலைகளை செய்து, அவர்களின் ஒரு கையில் மணி கட்டு கீழ் வெட்டி கொடூரமாக கொலை செய்யும் சீரியல் கொலைகாரன் பிடிக்க தனிப்படையமைத்து காவல்துறை அதிகாரி நாகேந்திரா “கல்யாண் குமார் ” தீவிர விசாரணையை மேற்கொள்கிறார். இந்த கொலைகளை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணற தொடர்ந்து கொலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு புறம் வசந்த் விஜய் சீரியல் கில்லர் வேஷத்தில் தன் மனைவியை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க மீண்டும் தீவிரமாக களமிறங்குகிறார் இந்திரா. இதில் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறார். இறுதியில் கொலையாளிக்கும் இந்திரா மற்றும் கயலுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன? கொலை எதற்காக நடந்தது? யாரை பழிவாங்க கயல் பலிகாடானார்? இந்திராவின் பார்வை பறி போனதற்கான காரணம் என்ன? இந்திரா கொலையாளியை கண்டுபிடித்தாரா? இதற்கான விடைகளை திரையில் திகில் சம்பவங்களோடு ரசிக்கலாம்.
வசந்த் ரவி குடி பயக்கம் மற்றும் கோபக்கார போலீஸ் அதிகாரியாக இந்திராவாக விஜய் வசந்த் திரை கதையின் நாயகனாக தன்னுடைய உணர்ச்சிகரமான மெய் சிலிர்க்கும் நடிப்பால் திரையில் மனதை ஈர்க்கிறார். தனது கண் பறி போவது, மனைவியின் இறப்பு, தனது. போலீஸ் வேலை VRS வாங்குவது போன்ற பிரச்சனைகள் இருந்தும், கொலையாளியை விடாப்படியாக கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி என்று பலவித பரிமாணங்களை தன்னுடைய தேர்ந்த நடிப்பால் விஜய் வசந்த் திரையில் ரசிக்க வைத்துள்ளார். பார்வை திறன் குறைபாடு உள்ளவர் போன்று தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் விஜய் வசந்த்.