சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைநல மருத்துவர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் என அனைவரும் இக்குழந்தைக்குச் சீரான தோற்றத்தையும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தையும் வழங்குவதற்காக ஒரே நோக்குடன் இணைந்து பணியாற்றினர்,” என்றார்.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, ஒரு மருத்துவ சாதனையை விட மிக மேலானது. அந்தச் சிறுவனுக்கு, இது ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பட்ட மூளை வளர்ச்சி மற்றும் முக சிதைவு ஏற்படுத்துகிற சிரமங்களும், கட்டுப்பாடுகளும் இன்றி அன்றாட வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடும் திறனுக்கான கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அவனது குடும்பத்திற்கு, நிம்மதியையும், புத்துயிர் பெற்ற நம்பிக்கையையும், தங்கள் குழந்தை இப்போது உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தையும் இச்சிகிச்சை தந்திருக்கிறது. சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தின் மதிப்பையும், ஒருங்கிணைந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் இந்த சிகிச்சை நேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது போன்ற சாதனை நிகழ்வுகள், ஆரம்பகால நோயறிதல், எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவை, மற்றும் இதுபோன்ற மேம்பட்ட சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே சென்னையிலும் சாத்தியம் என்ற விழிப்புணர்வைப் பரப்புவதன் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது.