ஜீவா-மேகா இருவரும் பாண்டிச்சேரியில் காதலித்து வருகின்றனர் ,ஜீவா (மாஸ் ரவி) மேகா (லட்சுமி பிரியா) இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். ஒரு நாள் மேகா தன் கனவில் ஜீவாவிற்கு அசம்பாவிதம் நடப்பது போல் காண்கிறார், உடனே ஜீவாவை தொடர்பு கொள்ளும் போது ஜீவா திடீரென காணாமல் போகிறார். ஜீவாவுடன் சென்ற இடங்களிளெல்லாம் தேட, எந்த தகவலும் கிடைக்காமல் மேகா அதிர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் வடசென்னையில் பெரிய தாதாவாக வலம் வரும் சூப்பர் சுப்பராயன், தனக்கு போட்டியாக யாரும் இருக்கக்கூடாது என்று (நல்ல நேரத்தில்)தனது அடியாட்களை அனுப்பி அனைவரையும் கொல்கிறான். இவற்றையெல்லாம் செய்வது தாதா சூப்பர் சுப்பராயனிடம் அடியாளாக இருக்கும் (அடிமை நாய்)சாய் தீனா. சூப்பர் சுப்பராயனிடம் நல்லவனாக நடித்து அவரையே கொன்று விட்டு சாய்தீனா தா தவா வளம் வருகிறார், மாற்றும் அப்பகுதி இளைஞர்களை அடியாட்களாக மாற்றி அட்டூழியம் செய்கிறான். தன் தந்தையை கொன்ற சாய்தீனாவை பழி தீர்க்காமல், நல்வழியில் செல்ல முடிவெடுத்து உடற்பயிற்சி கூடம் நடத்துகிறான் மாஸ் ரவி. அப்பகுதி இளைஞர்களை காப்பாற்ற, அவர்களின் உரிமையை மீட்க சாய் தீனாவை மாஸ் ரவி எதிர்க்க, இருவருக்குள்ளும் முட்டலும் மோதலும் அடிக்கடி நடக்கிறது.