மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் கதிர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் மலையாள திரையில் ஜொலிக்கிறார் கதிர் குறிப்பாக . தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, துரோகத்தின் வலியால் துடிக்கும் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கும் கதிர் நடிப்பு மிக அருமை.கதையின் நாயகனாக இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு அதில் “சாதி.துரோகம், வன்மம், நட்பு, காதல் , பாசம் மையமாக கொண்டு திரை கதை அமைக்க பட்டுள்ளது மற்றும் வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடு, அரசியல் கட்சி ஒன்றில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சி ஆதாயத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொள்வதோடு, மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகளை தடுத்து, அதன் மூலமும் ஆதாயம் தேடுவதை அறிந்துக் கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். கதிரை கட்டுப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் விரிக்கும் சதி வலையில், இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை என்னவானது? என்பதை அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் பரபரப்பான கதை மற்றும் அரசியல் பின்னணியோடு திரை கதை அமைக்க பட்டு அதனை திரையில் அனைவரும் சிந்திக்கவும் ரசிக்கவும் செய்துள்ளது‘மீஷா’. ,