சென்னையில் மழை பெய்யும் பொழுது மின்னல் மின்னல் வீட்டு சுவற்றை தாக்குகிறது இதன் காரணமாக இரண்டு கால கட்டமும் ஒரே டைம் லைனில் உருவாகுவது போல் காட்டியுள்ளனர் இருவரும் இருப்பது ஒரே வீட்டில் தான், ஆனால், காளி வெங்கட் இருப்பது 2012, தர்ஷன் இருப்பது 2022, பிறகு இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வு சுவாரசியமாக அனைவருக்கும் புரியும் படியாக திரைக்கதையாக அமைத்துள்ளார் இயக்குனர்,
நாயகன் தர்ஷன் தன் காதலியை அர்ஷாவை திருமணம் செய்து தருமாறு அவர் அப்பாவிடம் கேட்க, அவரும் சொந்தமாக வீடு வாங்கினால் கட்டி தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் வேளச்சேரி-ல்
12 வருட பழைய அப்பார்மெண்ட் வாங்கி அந்த வீட்டில் இவர்கள் குடியேறியதும் அமானுஷியமாக பல விஷயங்கள் நடக்கிறது, வேறு யாரோ அந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறார்கள்.
அதே நேரத்தில் மறுபக்கம் காளி வெங்கட் வீட்டிலும் இதே மாதிரி ஒரு உணர்வை உணர, ஒரு கட்டத்தில் வீட்டில் இருப்பது யார் என்று ஒருவருக்கொருவர் சுவரில் எழுத, அங்கு தான் பெரிய டுவிஸ்ட் வருகிறது.
இவர்கள் இருவரும் இருப்பது ஒரே வீட்டில் தான், ஆனால், காளி வெங்கட் இருப்பது 2012, தர்ஷன் இருப்பது 2022, பிறகு இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வு சுவாரஸ்யமான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.