பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகனான பிரபாகரன்(வெற்றி), தனது தந்தையின் வாழ்க்கையைப் பற்றிய தொடர் கதையாக விவரிக்க பத்திரிக்கை நிறுவனம் வெற்றிடம் கோரிக்கை வைக்க அதனை ஏற்று மதுரையிலிருந்து சென்னையில் உள்ள தனியார் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகிறார். அந்த தொடரை பிரபல பத்திரிகையாளரான சுவாதி(ஷில்பா மஞ்சுநாத்) எழுதுகிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருடன் மின்னல் ராஜா (கிங்ஸ்லி) மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவின் (தம்பி ராமையா) அறிமுகம் கிடைத்து நட்பாக பழகுகிறார். தனது தந்தை ஒரு க்ரைம் எழுத்தாளர் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கும் புலனாய்வுத் திறனை பயன்படுத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு துப்பு துலக்க உதவிகள் செய்து பாராட்டுதல்களை வாங்கி கொடுக்கிறார். இந்த நேரத்தில், ஒரு பெண் நிருபரும் சில பள்ளி மாணவர்களும் “முகம்” சிதைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா களம் இறங்கி தனக்கு உதவியாக பிராபாகரனை வைத்துக் கொண்டு விசாரணையை தொடங்குகிறார். இந்த சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகளும் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க பிரபாகரனின் உதவியை நாடுகிறார். இந்த தொடர் கொலைகள் மற்றும் தற்கொலைகளின் பின்னணியைக் கண்டறிய காவல்துறைக்கு வெற்றி எவ்வாறு கண்டுபிடிக்க உதவி செய்தாரா? கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் மர்ம “முகம்” யார் என்பதே? ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைக்கதை .