மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி குடும்ப தலைவி பேரரசி (நித்யா மெனேன்). இவர்கள் இருவருக்குள் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் போய் நிற்கிறது கணவன் – மனைவி பிரச்னை.
அதன் பிறகு ஆகாச வீரனுக்கு அறிவிக்காமல் அவர் மகளுக்கு மொட்டையடிக்க கோயிலில் கூடுகிறது பேரரசியின் குடும்பம். விஷயம் அறிந்த ஆகாச வீரன் குடும்பம். அவர்கள் ஏன் பிரிந்தார்கள், என்ன சண்டை, இருவீட்டாரின் பஞ்சாயத்து மாற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் திரையில் ரசிக்கும் படி இருந்தது இறுதியில் இரு வீட்டாரின் கோபம் எங்கு போய் முடிந்தது என்பதே தலைவன் தலைவன் திரைக்கதை இதனை இயக்குநர் பாண்டிராஜ் சிறப்பாக திரைக்கதை அமைத்து திரையில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.
தலைவன் தலைவி திரைக்கதைக்கு யோகி பாபு, சரவணன், செம்பன் வினோத், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, தீபா, ரோஷினி ஹரிப்ரியன், சென்றாயன் எனப் படம் முழுக்க அத்தனை கதாபாத்திரங்கள். அனைவரும் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தை திரையில் ரசிக்கும் படி சிறப்பாக நடித்துள்ளனர்.