இன்று மக்கள் மத்தியில் போன் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் தனது வாழ்க்கையை மேம்படுத்து கின்றனர் இதனை திரை கதையாக ட்ரெண்டிங் என்ற தலைப்பில் இயக்குனர் சிவராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ராம் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கலையரசனுடன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் நடக்கும் விபரீதத்தை மையமாக வைத்து திரை கதை அமைக்க படுத்து.
ட்ரெண்டிங் திரை படத்தில் கலையரசன், பிரியாலயா இருவருமே திருமணம் ஆகி சந்தோஷமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். தங்களுடைய பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள்.
இவர்களை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையாளர்கலக உள்ளானார். youtube சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து மாத தவணை முறையில் பெரிய பங்களா, வீடு, கார் என்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களுடைய youtube சேனல் முடக்கப்படுகிறது.
கலையரசன், பிரியாலயா YOUTUBE வருமானமும் நின்று விடுகிறது. பின் கடன் பிரச்சனையில் கலையரசன், பிரியாலயா ஜோடி சிக்கி கொள்கிறார்கள். அந்த சமயத்தில் தான் மர்மநபர் ஒருவர் இவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் 2 கோடி பணம் தருவதாகவும் கூறுகிறார். அதோடு அந்த நிகழ்ச்சியை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார்கள்.
தொடர்ந்து 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும், கொடுக்கும் டாஸ்குகளில் வெற்றி பெற்றால் தான் பரிசு கிடைக்கும் என்றும், தோல்வி அடைந்தால் வெற்றி பெற்ற பரிசு தொகையை திரும்ப கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்குப்பின் கலையரசன், பிரியாலயா இருவரும் போட்டியில் வெற்றி பெற்றார்களா? எதற்காக போட்டி நடந்தது? போட்டியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.திரை கதை சில வருடங்களுக்கு முன் புளு வேல் கேம் நடக்கும் ரியல் ஸ்டோரி போன்ற உணர்வை இந்த படம் கொடுத்து.