அறிமுக இயக்குனர் எம். கோபி இயக்கத்தில் அப்பு குட்டி, தம்பி ராமையா, தினேஷ், பிரனா, ஆனந்த் பாண்டி மற்றும் ஷியாமளா ஆகியோர் நடித்துள்ள யாதும் அறியான் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
யாதும் அறியான்” இரண்டு நண்பர்களும், அவர்களின் காதலிகளும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு நடு காட்டிற்குள் தங்குகின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் தனிமையான பங்களாவில், ஒரு நண்பனின் காதலி மர்மமான மரணம் நிகழ்கிறது. இந்த சம்பவம் அவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது, மேலும் அதை மறைக்க முயலும் அவர்களின் முடிவுகள், இன்னும் பயங்கரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தக் கதை மர்மத்தையும், மனித உணர்ச்சிகளின் உளவியல் ஆழத்தையும் பற்றி திரையில் பயத்துடன் பார்க்க வைத்து உள்ளதூ . கதையின் முடிவு, எதிர்பாராத திருப்பங்களுடன், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது