வாசன் (நாகராஜ் கண்ணன்), வார இதழ்களுக்குத் தொடர்கதை எழுத்தாளர் தான் ஒரு படைப்பாளன், தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியே தானும் ஒரு கடவுள் என்ற என்று புத்தகம் பதிப்பாளர் டெல்லி கணேஷ் இடம் விவாதிக்கிறார் எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்) .
சிறுகதை எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்) அவரது ஒரு கதையில் 49 கொலைகள் செய்த தனபால் என்கிற தாதா, 50வது கொலையைச் செய்ய முடியாமல் இருக்கிறார். அவரது கூட்டத்தில் இருக்கும் ஒருவரால் கொலை செய்யப்படப் போகிறார் என்ற செய்தியை ஜோசியரிடமிருந்து பெறுகிறார்.
மற்றொரு கதையில் விவசாயக் கூலியின் மகளான ராஜி (மிருதுளா) மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்க, கஷ்டமான நுழைவுத் தேர்வு ஒன்று அதற்குத் தடைக்கல்லாக வருகிறது.
மூன்றாவது கதையில் ரமேஷ் – ராதிகா தம்பதியினர் தங்கள் வீட்டு மேசையில் வைத்த இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு காணாமல் போக, சந்தேகம் வீட்டில் வேலை பார்க்கும் செல்வியின் (ஐஸ்வர்யா ரகுபதி) மீது விழுகிறது.
இப்படியாக மூன்று கதைகளும் இக்கட்டான சூழ்நிலைக்கு வர, அந்தக் கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்கள் தரப்பில் இருக்கும் நியாய அநியாயங்களை எழுத்தாளரிடம் முறையிட முன் வருகிறார்கள் அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா இல்லையா என்பது மீதி கதை.