“எனக்கு நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்கள் என்று ராஜூ எப்போதும் சந்தோஷமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார். எல்லோரும் என்னிடம் அப்படி சொல்லும் அளவுக்கு எனக்கு கடவுள் ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார். இந்த தமிழ் திரை உலகம் எனக்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எல்லா படமுமே எனக்கு ஒரு முதல் படம் போலத்தான். இயக்குநர் ராகவ் படமாக்கிய காட்சிகள் எல்லாமே ரொம்ப புதுமையாக இருந்தது. என்னை வைத்து ஒரு காட்சி எடுக்கும் போது, இதற்கடுத்ததாக எதிரில் வேறு விதமாக ஒரு காட்சியை எடுக்க போகிறேன் என்பார். அதில் யார் நடிக்கிறார்கள், என்னைவிட நன்றாக நடித்து விடுவார்களோ என்றெல்லாம் எனக்கு தோன்றும். பல காட்சிகளில் இதையேதான் அவர் தொடர்ந்து என்னிடம் சொல்வார். பப்புவும் நானும் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் நடித்துள்ளோம்” என்றார்.