ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இதுவரை 2 பாகம் முடிந்து தற்போது மூன்றாவது பாகம் எட்வர்ட் இயக்கத்தில் ஸ்கார்லட் ஜான்சன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளிவந்துள்ளது.
டைனோசர்கள் தாங்கள் வாழ்வதற்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு ஒரு புதிய நோய் வந்து 5-ல் ஒருவர் இறப்பார்கள், அதற்கான மருந்து அந்த மறைந்து வாழும் டைனோசர்களிடம் தான் உள்ளது என அறிந்து அதன் உடலில் இருந்து ரத்தம் மாதிரி எடுக்க ஒரு டீம் புறப்படுகிறது.
அதே கடல் பகுதியில் ஒரு குடும்பம் போட்-ல் செல்கிறது, அவர்கள் சென்ற போட் சில(கடல் வாழ் உயிரினங்கள்) டைனோசர்களால் தாக்கப்பட, அவர்களை அந்த டைனோசரிடம் இரத்தம் எடுக்க செல்லும் குழு காப்பாற்றுகிறது.
அதை தொடர்ந்து மிகப்பெரும் டைனோசர் தாக்குதலால், இவர்கள் அனைவரும் டைனோசர்கள் வாழும் தீவில் மாட்டிக்கொள்ள பிறகு என்ன ஆனது என்பதல் சாகசங்களே இந்த Jurassic World Rebirthr திரை கதை.