கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டக்கல்லூரி மாணவரைச் சுற்றி நகர்கிறது. சட்டக்கல்லூரியில் நடக்கும் முறைகேடுகளைக் சுட்டிக்காட்டி கல்லூரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததால், சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திய கார்த்திக், சமுதாயத்தில் நடக்கும் பொறுப்பற்ற நடத்தையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அநீதிக்கு எதிராக நின்று அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டு நடவடிக்கை எடுப்பதால் சுற்றியுள்ள அனைவரும் அவரை வெறுக்கின்றனர். அவனது நடத்தையால் அவனது குடும்பத்தினர் விரக்தியடைந்தனர். இந்நிலையில், தாங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள அபார்ட்மெண்ட் அசோசியேஷனைக் கலந்தாலோசிக்காமல் ஆங்காங்கே சேதமடைந்த அடுக்கு மாடி இடிப்புக்கு கார்ப்பரேஷனில் உத்தரவை பெற்றதால், குடியிருப்பவர்கள் அவனிடம் சண்டை போடும் போது போலீஸ் கார்த்திக்கை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறது. மகனின் செயலை கண்டு எரிச்சலடையும் தந்தை குமாரசாமி (அச்யுத் குமார்) மனஉளச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஊட்டியிலிருந்து தந்தையை காண சென்னை வரும் அவனது மூத்த சகோதரி ஆனந்தி (பூமிகா சாவ்லா), தன் தம்பியை சிறந்த மனிதனாக மாற்றுவதாக பெற்றோருக்கு வாக்குறுதி அளித்து, ஊட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டிற்கு மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறாள். கணவர் அரவிந்த் (நட்டி) குடும்பத்தினருக்கு கார்த்தியின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை வெறுக்கின்றனர். இருப்பினும், கார்த்திக், தனது பொறுப்பற்ற அணுகுமுறையால், ஆனந்தி மற்றும் அவரது கணவர் அரவிந்த் குடும்பத்தில் பெரும் ஈகோ கொண்ட ஆனந்தியின் மாமனருடன் (ராவ் ரமேஷ்) பிரச்சனை ஏற்பட்டு சகோதரியின் குடும்பம் உடைகிறது. இம்முறை கார்த்திக்கின் தந்தை அவன் யார் என்ற உண்மையை கூறுகிறார். தான் யார் என்பதை அறிந்த கார்த்தி தன்னை முற்றிலுமாக மாற்றி தன்னால் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் களம் இறங்குகிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீதிக்கதை.